கேள்வி
ரமழானுடைய முதலாவது ஜும்ஆ இரவில் 40 முறை கலிமா சொன்னால் ஒரு ஹஜ்ஜுடைய நன்மை கிடைக்கும் என்றும், இதனை மற்றவர்களுக்குப் பகிர்ந்தால் இரண்டு ஹஜ்ஜுடைய நன்மைகள் கிடைக்கும் என்றும் பரவும் செய்தி உண்மையா?
பதில்
பதில்:
இது முற்றிலும் அடிப்படையற்ற, ஆதாரமற்ற ஒரு கட்டுக்கதையாகும். வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் ஃபேஸ்புக் (Facebook) போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இது போன்ற பொய்யான செய்திகளை யாருக்கும் பகிரக் கூடாது. இது ஒரு தவறான செயலாகும்.
ரசூல் (ஸல்) அவர்கள் ரமழானுக்கென ஏராளமான ஆதாரப்பூர்வமான அமல்களை நமக்குச் சொல்லித் தந்துள்ளார்கள். ரமழானுடைய உண்மையான கூலிகளைப் பெற்றுக்கொள்ள அந்த ஆதாரப்பூர்வமான அமல்களைச் செய்வதே நமக்குப் போதுமானதாகும்.
வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க