ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

ரமழானில் உம்ரா செய்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு ஹஜ் செய்த நன்மை கிடைக்குமா? இது அனைவருக்கும் பொதுவானதா?

நோன்பு ஹஜ்

← முந்தையஅடுதது →
கேள்வி
ரமழானில் உம்ரா செய்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு ஹஜ் செய்த நன்மை கிடைக்குமா? இது அனைவருக்கும் பொதுவானதா?
பதில்
பதில்:

ரமழானில் உம்ரா செய்தால் நபிகளாருடன் ஹஜ் செய்த கூலி கிடைக்கும் என்று ஸஹீஹுல் புகாரி மற்றும் முஸ்லிமில் ஹதீஸ் பதிவாகியுள்ளது. ஆனால், இது அனைவருக்கும் பொதுவானதா அல்லது அந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு மட்டும் உரியதா என்பதில் அறிஞர்களிடையே இருவேறு நிலைப்பாடுகள் உள்ளன. பல அறிஞர்களின் வலுவான நிலைப்பாடு என்னவென்றால், இது அந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு மட்டும் உரிய சிறப்புச் சலுகையாகும்.

காரணம்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்யச் சென்ற அந்தப் பெண்ணுக்கு மாதவிடாய் காரணமாக உம்ரா செய்யவோ அல்லது அவர்களுடன் இணைந்து அந்த ஹஜ்ஜை முழுமையாக நிறைவேற்றவோ வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்காக ரசூல் (ஸல்) அவர்கள் அவரிடம், "நீங்கள் ரமழானில் உம்ரா செய்யுங்கள், அது என்னுடன் ஹஜ் செய்த கூலியைத் தரும்" என்றார்கள்.

இது ஒரு பொதுவான சட்டம் என்றால், ரசூல் (ஸல்) அவர்கள் அனைவருக்கும் பொதுவாக, "மக்களே, நீங்கள் ரமழானில் உம்ரா செய்தால் என்னுடன் ஹஜ் செய்த கூலி கிடைக்கும்" என்று அறிவித்திருப்பார்கள். மேலும், அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்றவர்களில் சிலருக்கு மட்டுமே இந்த மாதவிடாய் போன்ற தடைகள் ஏற்பட்டன. எனவே, ரசூல் (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்யும் வாய்ப்பை இழந்து தவித்த அந்தப் பெண்ணின் இழப்பை ஈடு செய்வதற்காக வழங்கப்பட்ட ஒரு பிரத்தியேகமான நற்செய்தியாகவே இது அறிஞர்களால் விளக்கப்படுகிறது.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →