ரமழானின் ஒவ்வொரு இரவிலும் நரகத்திலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள் அல்லது ரமழானில் அதிகமானோர் நரகிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று வரக்கூடிய ஹதீஸ்கள் (திருமிதி, இப்னு குஸைமா போன்ற நூல்களில் வந்தாலும்) பலவீனமான (ழயீஃபான) செய்திகளாகும். எனவே, இந்தச் செய்திகளை நாம் உறுதியான ஆதாரமாகக் கொள்ள முடியாது.
மாறாக, ஸஹீஹுல் புகாரி மற்றும் முஸ்லிமில் வரக்கூடிய அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும், "ரமழான் வந்துவிட்டால் ஷைத்தான்கள் விலங்கிடப்படுவார்கள், நரகத்தின் வாசல்கள் அனைத்தும் மூடப்படும், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும்" என்ற ஆதாரப்பூர்வமான செய்தியே எங்களுக்குப் போதுமானதாகும்.
ரமழான் என்பது நிச்சயமாக நரக விடுதலையைப் பெற்றுத் தரும் மகத்தான பரக்கத் பொருந்திய மாதம் என்பதில் சந்தேகமில்லை; ஆனால், "ஒவ்வொரு இரவிலும் விடுதலை செய்யப்படுகிறார்கள்" என்று நேரடியாக வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமானவையே ஆகும்.