ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

பெண்கள் ரமழான் மாதத்தில் தராவீஹ் (இரவுத்) தொழுகையை வீட்டில் தொழுவது சிறந்ததா? அல்லது பள்ளிவாசலுக்குச் சென்று ஜமாஅத்தோடு

நோன்பு தொழுகை

← முந்தையஅடுதது →
கேள்வி
பெண்கள் ரமழான் மாதத்தில் தராவீஹ் (இரவுத்) தொழுகையை வீட்டில் தொழுவது சிறந்ததா? அல்லது பள்ளிவாசலுக்குச் சென்று ஜமாஅத்தோடு தொழுவது சிறந்ததா?
பதில்
பதில்:

பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் எப்பொழுதும் வீட்டில் தொழுவதுதான் மிகச் சிறந்ததாகும். கடமையான (ஃபர்ளு) தொழுகைகளைக் கூட பெண்கள் வீட்டில் தொழுவதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

ஒருமுறை மதீனாவைச் சேர்ந்த பெண்களிடம், "நீங்கள் மதீனா பள்ளிவாசலில் தொழுவதை விட, உங்களது வீடுகளில் தொழுவதே மிகச் சிறந்ததாகும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். கடமையான தொழுகைகளுக்கே இந்தச் சிறப்பு என்றால், சுன்னத்தான தராவீஹ் தொழுகைக்கு வீட்டில் தொழுவது இன்னும் அதிக சிறப்பிற்குரியதாகும்.

அதேவேளை, உம்ரா அல்லது ஹஜ்ஜுக்காகப் புனிதப் பயணமாகச் சென்றிருப்பவர்கள், ஹரமின் சிறப்பைக் கருதி அங்குப் பள்ளிவாசலில் தொழலாம். பொதுவான சூழ்நிலைகளிலும், பெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று ஜமாஅத்தோடு தராவீஹ் தொழுவதற்கு மார்க்கத்தில் எவ்விதத் தடையுமில்லை; தாராளமாகத் தொழலாம். ஆனால், மார்க்க ரீதியாக எது மிகச் சிறந்தது என்று பார்த்தால், அவர்கள் தமது வீடுகளில் தொழுவதே மிகச் சிறந்ததாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →