ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

திருமணமான பெண்கள், வறுமையில் கஷ்டப்படும் தமது தாய் தந்தையருக்குத் தமது ஸகாத் பணத்தைக் கொடுக்கலாமா?

ஸகாத் பெண்கள் வட்டி

← முந்தையஅடுதது →
கேள்வி
திருமணமான பெண்கள், வறுமையில் கஷ்டப்படும் தமது தாய் தந்தையருக்குத் தமது ஸகாத் பணத்தைக் கொடுக்கலாமா?
பதில்
பதில்:

ஆம், தாராளமாகக் கொடுக்கலாம். ஒரு பெண், கடமையாகத் தான் வழங்க வேண்டிய தனது ஸகாத் பணத்தை (உதாரணமாகத் தனது நகைகளுக்காகக் கொடுக்கும் ஸகாத்தை), வறுமையில் கஷ்டப்படும் தனது தாய் தந்தையருக்குக் கொடுத்து உதவுவதில் மார்க்க ரீதியாக எவ்விதத் தடையுமில்லை.

ஒரு பெண் தனது சொந்த உழைப்பின் மூலமோ அல்லது தர்மத்தின் மூலமோ தன் தாய் தந்தையரைக் கவனிப்பதற்கு ஒரு ஆணைப் போலவே முழுமையான கடமையும் உரிமையும் கொண்டவளாவாள். இதற்கு குறுக்கே நிற்பதற்குக் கணவனுக்குக் கூட எவ்வித உரிமையும் கிடையாது. எனினும், தாய் தந்தையரைக் கவனிப்பதற்குத் தர்மங்களை விட, ஸகாத் பணத்தின் மூலமாகத்தான் அவர்களைக் கவனிக்க முடியும் என்ற வறுமை நிலை காணப்பட்டால், கட்டாயம் அத்தகைய தாய் தந்தையருக்குத் தனது ஸகாத் பணத்தை வழங்கி அவர்களைப் பராமரிக்கலாம். இதில் கணவனின் தலையீடோ தடையோ அவசியமற்றதாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →