ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

ஸஹீஹுல் புகாரியில் ''குரங்கு விபச்சாரம் செய்ததாகவும், அதற்கு கல்லெறியப்பட்டதாகவும்'' வரும் செய்தியை எவ்வாறு புரிந்துகொள்

குர்ஆன்

← முந்தையஅடுதது →
கேள்வி
ஸஹீஹுல் புகாரியில் ''குரங்கு விபச்சாரம் செய்ததாகவும், அதற்கு கல்லெறியப்பட்டதாகவும்'' வரும் செய்தியை எவ்வாறு புரிந்துகொள்வது? இது குர்ஆன், சுன்னாவுக்கு முரண்படுகிறதா?
பதில்
பதில்:

ஸஹீஹுல் புகாரியில் அம்ரு இப்னு மைமூன் என்பவர் ஜாஹிலிய்யா (அறியாமை) காலத்தில் குரங்குகள் விபச்சாரம் செய்ததற்காக கல்லெறிந்து தண்டிக்கப்பட்டதை தான் கண்டதாகக் கூறும் ஒரு செய்தி இடம்பெற்றுள்ளது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதோ, செய்ததோ, அங்கீகரித்ததோ இல்லை; எனவே இது அடிப்படையில் ஒரு "ஹதீஸ்" (நபிமொழி) கிடையாது. இது ஜாஹிலிய்யா காலத்தில் வாழ்ந்த ஒருவரின் தனிப்பட்ட பார்வை மற்றும் செய்தியாகும்.

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இந்தச் செய்தியை "குற்றவியல் சட்டங்கள்" (கிதாபுல் ஹுதூத்) என்ற பாடத்தின் கீழ் கொண்டுவரவில்லை; மாறாக "அய்யாமுல் ஜாஹிலிய்யா" (அறியாமை கால நிகழ்வுகள்) என்ற வரலாற்றுப் பாடத்தின் கீழ்தான் பதிவு செய்துள்ளார். இமாம் புகாரி இதை ஏன் கொண்டுவந்தார் என்றால், ஸஹீஹுல் புகாரியின் கடுமையான நிபந்தனைப்படி, ஒரு அறிவிப்பாளர் தனது ஆசிரியரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும். அம்ரு இப்னு மைமூன் என்பவர் நபித்தோழர்களை நேரில் சந்தித்தவரா, அவர் ஜாஹிலிய்யா காலத்தை அடைந்தவரா என்பதை நிரூபிப்பதற்காகவே, "நான் ஜாஹிலிய்யா காலத்தில் இப்படி ஒன்றைக் கண்டேன்" என்ற அவருடைய அந்த வரலாற்றுச் செய்தியை இமாம் புகாரி கொண்டுவந்துள்ளார்.

மற்றபடி, குரங்குக்கு விபச்சாரச் சட்டம் உண்டா இல்லையா என்பதற்கோ, இதிலிருந்து மார்க்க சட்டங்களை எடுப்பதற்கோ இதை இமாம் புகாரி கொண்டுவரவில்லை. எனவே, ஹதீஸ் கலையின் நுணுக்கங்களை அறியாமல் இந்தச் செய்தியை வைத்து இஸ்லாத்தை கேலி செய்வதும், விமர்சிப்பதும் முற்றிலும் அறியாமையாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →