ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

பள்ளிவாசலுக்கு முன்னால் அல்லது அருகில் கப்ர் (மையவாடி) இருந்தால், அந்தப் பள்ளிவாசலில் தொழுவது மார்க்க ரீதியாகக் கூடுமா?

தொழுகை மரணம் அகீதா

← முந்தையஅடுதது →
கேள்வி
பள்ளிவாசலுக்கு முன்னால் அல்லது அருகில் கப்ர் (மையவாடி) இருந்தால், அந்தப் பள்ளிவாசலில் தொழுவது மார்க்க ரீதியாகக் கூடுமா?
பதில்
பதில்:

பள்ளியினுள் (தொழும் இடத்தினுள்) கப்ர் இல்லாவிட்டால், பள்ளிவாசலின் மதிலுக்கு வெளியேயோ, முன்னாலோ அல்லது பக்கத்திலோ கப்ர் அல்லது மையவாடி இருப்பதனால் அந்தப் பள்ளியில் தொழுவதில் எவ்வித மார்க்கத் தடையும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "கப்ர்களை முன்னோக்கித் தொழக் கூடாது" என்று கூறியதன் அர்த்தம், ஒரு கப்ருக்கு நேராக முன்னாள் நின்று, அதனை முன்னோக்கித் தொழுவதையே குறிக்கும். பள்ளிவாசலின் சுவருக்கு வெளியே உள்ள கப்ர்களை நோக்கித் தொழுவதையோ அல்லது மையவாடிக்கு அருகில் உள்ள பள்ளியில் தொழுவதையோ இத்தடை குறிக்காது. ரசூல் (ஸல்) அவர்கள், அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோரின் கப்ர்கள் ஆயிஷா (ரழி) அவர்களின் அறைக்குள் இருந்தன; அதற்குப் பக்கத்திலேயே மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசல் அமைந்திருந்தது. இது மார்க்கத்திற்கு முரணாக இருந்திருந்தால் நபித்தோழர்கள் அதைத் தடுத்திருப்பார்கள். பிற்காலத்தில் விரிவாக்கத்தின் போதுதான் அந்தக் கப்ர்கள் பள்ளிவாசல் வளாகத்திற்குள் இணைக்கப்பட்டன.

அதேபோல, பழைய கப்ர்கள் இருந்த நிலம் சமப்படுத்தப்பட்டு, அங்கு எவ்வித கப்ரின் அடையாளங்களும் இல்லாதவாறு கட்டப்பட்ட பள்ளிகளில் தொழுவதும் கூடும். மஸ்ஜிதுந் நபவியும் ஆரம்பத்தில் முஷ்ரிக்குகளின் மையவாடியாக இருந்த நிலத்தைச் சமப்படுத்தியே கட்டப்பட்டது என்பதை நாம் வரலாற்றில் காண்கிறோம்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →