ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

பள்ளிவாசல் வளாகத்தில் இருக்கும் மரங்களில் இருந்து பொதுமக்கள் பழங்களைப் பறித்துப் பயன்பெறலாமா?

தொழுகை

← முந்தையஅடுதது →
கேள்வி
பள்ளிவாசல் வளாகத்தில் இருக்கும் மரங்களில் இருந்து பொதுமக்கள் பழங்களைப் பறித்துப் பயன்பெறலாமா?
பதில்
பதில்:

பள்ளிவாசலுக்கும், அதன் சொத்துக்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வரையில், பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள மரங்களில் இருந்து பொதுமக்கள் தாராளமாகப் பயன்பெறலாம். உதாரணமாக, மாம்பழம், பேரீச்சம்பழம் போன்ற கனிகளைச் சாப்பிடுவதோ அல்லது அந்த மரங்களில் நிழல் பெறுவதோ தவறில்லை.

ஆனால், அந்த மரங்கள் பள்ளியின் வருமானத்திற்காக எனப் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருந்தால் (உதாரணமாக, வருமான நோக்கத்திற்காகத் தேக்கு மரம் போன்றவற்றை வளர்ப்பது), அதனைப் பொதுமக்கள் தன்னிச்சையாக அறுத்து எடுத்துச் செல்லக் கூடாது. பொதுவாகப் பள்ளி நிர்வாகம் இத்தகைய கனிகளைப் பொதுமக்கள் பயன்படுத்துவதை அனுமதித்திருக்கும் பட்சத்தில், பொதுச் சொத்தான அதைப் பயன்படுத்துவதில் எவ்விதப் பிழையுமில்லை.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →