செயற்கைப் பல் கட்டுவது சம்பந்தமாக இஸ்லாத்தில் எந்தத் தடையுமில்லை. உடலில் இயற்கையாக ஏற்பட்ட குறைகளை நிவர்த்தி செய்கின்ற எந்தவொரு மருத்துவச் சிகிச்சைக்கும் மார்க்கத்தில் முழுமையான அனுமதி உண்டு.
உதாரணமாக, ஒருவருக்கு ஆறு விரல்கள் இருந்தால் அதனை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிக் கொள்ளலாம்; மேலதிகமாக உள்ள பற்களை அகற்றி அமைப்பினைச் சரிசெய்து கொள்ளலாம். ஆனால், இயற்கையாக உள்ள அமைப்பை, அவசியமின்றி வெறுமனே அலங்காரத்திற்காக மாற்றுவதைத் தான் மார்க்கம் தடை செய்துள்ளது.
புருவங்களை மழித்தல், பற்களுக்கு இடையில் செயற்கையாக இடைவெளியை ஏற்படுத்துதல், வழுக்கை அல்லாதவர்கள் செயற்கை முடி (ஒட்டுமுடி) வைத்தல், தேவையற்ற முறையில் அழகுக்காக நிற லென்ஸ்கள் அணிதல் போன்றவையே இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட (ஹராமான) அலங்காரங்களாகும். மாறாக, நோயின் காரணமாகவோ அல்லது விபத்தின் காரணமாகவோ பற்கள் உதிர்ந்தால், செயற்கைப் பற்களைப் பொருத்தி அந்த இயற்கையான குறையை நிவர்த்தி செய்வதில் எவ்விதத் தடையுமில்லை.