ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

பலதார மணம் (இரண்டு மனைவியர்) செய்தவர் இறந்த பின்னால், அவரது சொத்துக்களை இரண்டு மனைவியருக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் எ

சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
பலதார மணம் (இரண்டு மனைவியர்) செய்தவர் இறந்த பின்னால், அவரது சொத்துக்களை இரண்டு மனைவியருக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் எவ்வாறு பிரித்துக் கொடுக்க வேண்டும்?
பதில்
பதில்:

பலதார மணம் செய்தவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, ஒரு மனைவிக்கு மட்டும் சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு மற்றவரை நடுத்தெருவில் விடுவதாகும். இரண்டு மனைவியருக்கு மத்தியில் சொத்து விஷயத்தில் அநீதி இழைத்தவர், நாளை மறுமை நாளில் தனது உடலின் ஒரு பக்கம் சாய்ந்த (வளைந்த) நிலையில் வருவார் என்று ஹதீஸ்கள் கடுமையாக எச்சரிக்கின்றன.

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டப்படி, இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் அவரது மொத்தச் சொத்தில் எட்டில் ஒரு பங்கு (1/8) மனைவிக்குரியதாகும். அவருக்கு இரண்டு மனைவியர் இருந்தால், அந்த எட்டில் ஒரு பங்கை சரிசமமாகப் பிரித்து இருவருக்கும் கொடுக்க வேண்டும். (உதாரணமாக, மொத்தச் சொத்து 80 லட்சம் என்றால், எட்டில் ஒரு பங்குகான 10 லட்சத்தை இரண்டு மனைவியருக்கும் தலா 5 லட்சம் வீதம் பிரிக்க வேண்டும்). மேலும், இறந்தவரின் தாய்க்கு ஆறில் ஒரு பங்கு (1/6) சேரும்.

எக்காரணம் கொண்டும் தனது சொத்துக்கள் முழுவதையும் உயிருடன் இருக்கும் போதே ஒரு மனைவிக்கு மட்டும் வழங்கிவிட்டு, மற்றவர்களுக்குச் சொத்துக்கள் சேராமல் தடுப்பது மாபெரும் அநீதியாகும். நீதியான முறையில் இஸ்லாமியச் சட்டப்படி சொத்துக்களைப் பிரித்து வழங்குவதே ஒவ்வொருவரின் மீதும் கட்டாயக் கடமையாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →