ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

ஃபஜ்ருடைய அதானுக்குப் பிறகு அரை மணி நேரம் தாமதமாகத் தூங்கி எழும்பியவர் ஸஹர் செய்யலாமா? அவரது நோன்பின் நிலை என்ன?

நோன்பு தொழுகை

← முந்தையஅடுதது →
கேள்வி
ஃபஜ்ருடைய அதானுக்குப் பிறகு அரை மணி நேரம் தாமதமாகத் தூங்கி எழும்பியவர் ஸஹர் செய்யலாமா? அவரது நோன்பின் நிலை என்ன?
பதில்
பதில்:

ஃபஜ்ருடைய அதானுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து எழுந்தவர் எக்காரணம் கொண்டும் ஸஹர் செய்வதற்காக உணவோ நீரோ உட்கொள்ளக் கூடாது.

ஸஹர் என்பது ஃபஜ்ர் உதயமாகுவதற்கு (அதான் சொல்வதற்கு) முன்பாகவே முடித்துவிட வேண்டிய ஒன்றாகும். அதான் சொல்லப்படுகின்ற விநாடிகளில் ஒருவர் விழித்தால், அவசரமாக ஒரு மிடறு தண்ணீர் குடிப்பது வேறு; ஆனால் அரை மணி நேரம் என்பது ஃபஜ்ர் நேரம் முழுமையாக ஆரம்பித்துவிட்டதைக் குறிக்கிறது.

எனினும், அவர் உணவருந்தவில்லை என்பதற்காக அவரது நோன்பு முறிந்துவிடாது. அவர் ரமழான் மாதத்தில் இருப்பதால், இரவிலேயே அவருக்கு நோன்பின் நிய்யத் (எண்ணம்) இருந்திருக்கும். எனவே, ஸஹர் செய்யத் தவறிவிட்டாலும், அவர் எவ்வித உணவும் உட்கொள்ளாமல் தனது நோன்பைத் தொடர்ந்து பூரணமாக நிறைவேற்ற வேண்டும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →