ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

மஸ்ஜிதுந் நபவியில் உள்ள பச்சைக் குப்பாவின் (Green Dome) மீது, ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களின் கப்ரை உடைக்க முயன்ற வஹாபியின்

அகீதா

← முந்தையஅடுதது →
கேள்வி
மஸ்ஜிதுந் நபவியில் உள்ள பச்சைக் குப்பாவின் (Green Dome) மீது, ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களின் கப்ரை உடைக்க முயன்ற வஹாபியின் உடல் ஒட்டியிருப்பதாகப் பரவும் செய்தி உண்மையா?
பதில்
பதில்:

இது இணையதளங்களில், குறிப்பாகச் சில சூஃபித்துவ சிந்தனையுள்ளவர்களால் பரப்பப்படும் முற்றிலும் அடிப்படையற்ற, கட்டுக்கதையான செய்தியாகும். ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களின் கப்ரை உடைக்க முயன்ற வஹாபியை அல்லாஹ் தண்டித்து குப்பாவின் மேலேயே ஒட்டிப் பார்க்க வைத்துவிட்டான் என்று இவர்கள் கூறுகிறார்கள். இது ஒரு மாபெரும் அபத்தமாகும்.

இதன் உண்மையான பின்னணி என்னவெனில்:

  • முதலாவதாக, கப்ருகளுக்கு மேல் எந்தக் கட்டிடமோ குப்பாவோ கட்டப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வன்மையாகத் தடுத்துள்ளார்கள். இந்தப் பச்சைக் குப்பா நபிகளார் காலத்திலோ, சஹாபாக்கள் அல்லது தாபியீன்கள் காலத்திலோ கட்டப்படவில்லை; ஹிஜ்ரி 7-ஆம் நூற்றாண்டில்தான் இது கட்டப்பட்டது.
  • இரண்டாவதாக, அப்படி ஒருவர் கப்ரை உடைக்க முயன்றிருந்தால், அவரைத் தண்டிப்பதற்குப் பதிலாக நபிகளாரின் பச்சைக் குப்பாவின் மிக உயர்ந்த இடத்தில், மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் அல்லாஹ் அவரை ஒட்டி வைத்திருக்கிறான் என்று கூறுவது தண்டனையா? அல்லது அவருக்குக் கொடுக்கப்பட்ட மாபெரும் கண்ணியமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
  • மூன்றாவதாக, அந்தப் பச்சைக் குப்பாவின் மேல் தெரியும் அந்த மூடி போன்ற அடையாளம் என்னவென்றால், அது குப்பாவைச் சுத்தம் செய்வதற்கோ அல்லது வர்ணம் பூசுவது போன்ற பராமரிப்புப் பணிகளுக்காகவோ கீழிருந்து ஏறிச் செல்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு சிறிய வாசல் (Opening) ஆகும். அதைப் பாதுகாப்பாக மூடி வைத்திருக்கிறார்கள்.

இதைக் கூட அறியாமல், அதைப் பார்த்து ஒரு மனிதரின் உடல் என்று கற்பனை செய்து கதைகட்டி விடுவது சமுதாயத்தின் அறியாமையையே காட்டுகிறது. இதுபோன்ற போலியான அற்புதங்களையும், ஆதாரமற்ற குராஃபாத்துகளையும் (மூடநம்பிக்கைகளையும்) நம்புவதும் பரப்புவதும் இஸ்லாமிய அகீதாவிற்கு முற்றிலும் முரணானதாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →