ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

கணவன் நோயாளியாகவோ அல்லது வறுமையான நிலையிலோ இருக்கும் பட்சத்தில், வசதியுள்ள மனைவி தனது கடமையான ஸகாத் பணத்தை அவருக்குக் கொ

ஸகாத் திருமணம் வட்டி

← முந்தையஅடுதது →
கேள்வி
கணவன் நோயாளியாகவோ அல்லது வறுமையான நிலையிலோ இருக்கும் பட்சத்தில், வசதியுள்ள மனைவி தனது கடமையான ஸகாத் பணத்தை அவருக்குக் கொடுக்கலாமா?
பதில்
பதில்:

ஆம், தாராளமாக வழங்கலாம். கணவன் நோயாளியாகவோ அல்லது வறுமையிலோ இருக்கும் போது, மனைவி தனது ஸகாத் பணத்தை அவருக்குக் கொடுப்பதில் மார்க்க ரீதியாக எவ்விதத் தடையுமில்லை.

இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமே அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களின் மனைவி ஸைனப் (ரழி) அவர்கள் கேட்டபோது, நபிகளார் அதனை வழங்கி உதவுமாறு கூறினார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தியை நாம் ஹதீஸ்களில் காண்கிறோம்.

இருப்பினும், இதில் கவனிக்க வேண்டிய நிபந்தனை என்னவென்றால்: மனைவி தனது முழு விருப்பத்தோடு இதனை வழங்க வேண்டுமே தவிர, கணவனோ அல்லது வேறு எவரோ அதைத் தருமாறு அவளை வற்புறுத்தவோ, மறைமுகமாக நிர்ப்பந்திக்கவோ கூடாது. மனைவி மனமுவந்து அளித்தால் அதை கணவன் பெறுவது முற்றிலும் ஆகுமானதேயாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →