எந்த நிலையிலும் ஒரு மனிதனின் அவ்ரத் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய அடிப்படை விதியாகும். நோயாளியின் மனைவியைத் தவிர வேறு எவர் சுத்தம் செய்தாலும் அவ்ரத்தை பேணுவது கட்டாயமாகும்.
ஆனால், ஒரு நோயாளியின் சிகிச்சைக்காகவோ அல்லது கட்டாயம் அவரைச் சுத்தப்படுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திலோ, நாம் இயன்றவரை அவ்ரத்தை பேண முயற்சிக்க வேண்டும். உதாரணமாக, கையுறைகள் அணிதல், நேரடியாகப் பார்க்காமல் சுத்தம் செய்தல் போன்ற முயற்சிகளை எடுக்க வேண்டும். நோயை குணப்படுத்துவதற்காகத் தொட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் மருத்துவக் காரணங்களுக்காக அதனைச் செய்யலாம்.
நமது முழுமையான முயற்சிகளையும் மீறி, சூழலின் நிர்ப்பந்தத்தால் அவ்ரத் வெளிப்பட்டால், அதற்காக நாம் குற்றவாளியாக மாட்டோம். மாறாக, நோயாளிகளுக்குச் செய்யும் அந்த உயர்ந்த சேவைக்காகவும், நமது நேரத்தை தியாகம் செய்து அவர்களுக்கு உதவுவதற்காகவும் அல்லாஹுத்தஆலா மகத்தான நற்கூலியை வழங்குவான்.