ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

நோன்பாளி வாய் நாற்றம் காரணமாக மௌத் வாஷ் (Mouthwash) பயன்படுத்தி வாயைக் கழுவி கொப்பளிக்கலாமா?

நோன்பு

← முந்தையஅடுதது →
கேள்வி
நோன்பாளி வாய் நாற்றம் காரணமாக மௌத் வாஷ் (Mouthwash) பயன்படுத்தி வாயைக் கழுவி கொப்பளிக்கலாமா?
பதில்
பதில்:

வாய் கொப்பளிப்பது மார்க்க ரீதியாக நோன்பாளியாக இருந்தாலும் இல்லை என்றாலும் தவறில்லை. உளு எடுக்கும் போது பல நேரங்களில் நாம் வாய் கொப்பளிக்கிறோம்; இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே. "நோன்பாளியின் வாய் வாசம் இறைவனிடத்தில் கஸ்தூரியை விடச் சிறந்தது" என்ற ஹதீஸின் அர்த்தம், அல்லாஹ்விடத்தில் நோன்பாளியின் அந்தஸ்தைக் குறிக்கிறதே தவிர, அவர் வாயில் நாற்றம் வீசிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதல்ல.

எனவே மௌத் வாஷ் பயன்படுத்துவது மார்க்கத்திற்கு முரணானது அல்ல. ஆனால், அதைப் பயன்படுத்தும் போது தண்ணீர் அல்லது அந்தத் திரவம் தொண்டை வழியாக உள்ளே சென்றுவிடாதவாறு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்தப் பேணுதல் மிக அவசியமாகும். மற்றபடி வாய் நாற்றத்தைப் போக்குவதற்காகக் கொப்பளிப்பதில் எந்தத் தவறும் இல்லை.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →