ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

பக்கத்துப் பள்ளிவாசலிலும், சற்று தூரத்து பள்ளிவாசலிலும் வெவ்வேறு நேரங்களில் அதான் (பாங்கு) சொல்லப்படுகிறது. நோன்பு திறப்

தொழுகை நோன்பு

← முந்தையஅடுதது →
கேள்வி
பக்கத்துப் பள்ளிவாசலிலும், சற்று தூரத்து பள்ளிவாசலிலும் வெவ்வேறு நேரங்களில் அதான் (பாங்கு) சொல்லப்படுகிறது. நோன்பு திறப்பதற்கு நான் எந்த அதானைப் பின்பற்ற வேண்டும்?
பதில்
பதில்:

நோன்பு திறப்பதற்கு அதான் (பாங்கு) என்பது ஒரு அடிப்படை அளவுகோல் அல்ல; மாறாக சூரியன் மறைவதுதான் (குரூபுஷ் ஷம்ஸ்) உண்மையான அடிப்படை. சூரியன் மறைவதை நாம் நேரடியாகக் காண முடியும் என்றால் அதான் சத்தம் கேட்காவிட்டாலும் உடனடியாக நோன்பு திறக்கலாம்.

சூரியன் மறைவதைக் காண முடியாத சூழ்நிலையில் அதானைக் கேட்டுத் திறக்கிறோம் என்றால், சூரியன் மறைந்த பின்தான் பாங்கு சொல்வார்கள் என்பது உறுதி. எனவே, எந்தப் பள்ளியிலிருந்து முதலில் அதான் சத்தம் கேட்கிறதோ (அது சரியான நேரமாக இருந்தால்), தாராளமாக அந்த அதானைப் பின்பற்றி நோன்பு திறக்கலாம். தூரத்துப் பள்ளியா, பக்கத்துப் பள்ளியா என்பது முக்கியமல்ல; பாங்கு என்பது சூரியன் மறைந்துவிட்டது என்பதற்கான அடையாளம் மட்டுமே. அதைக் கேட்டவுடன் நோன்பு திறக்கலாம்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →