ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

நிர்ப்பந்த நிலையில் கிரெடிட் கார்டை (Credit Card) உபயோகிப்பவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? அதைப் பயன்படுத்துவது மார்க

வட்டி

← முந்தையஅடுதது →
கேள்வி
நிர்ப்பந்த நிலையில் கிரெடிட் கார்டை (Credit Card) உபயோகிப்பவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? அதைப் பயன்படுத்துவது மார்க்கத்தில் ஆகுமானதா?
பதில்
பதில்:

கிரெடிட் கார்டைப் பொறுத்தவரை, தாமதக் கட்டணம் (Late fee) செலுத்தாமல் தவிர்த்து விட்டாலும் கூட, அதைப் பயன்படுத்துவது ஹராமாகும். ஏனெனில், நீங்கள் ஒரு பொருளை வாங்கும் போது, வங்கியானது கடைக்காரருக்குச் செலுத்த வேண்டிய தொகையில் 2.5% முதல் 7.5% வரை வட்டியை கழித்துவிட்டுத்தான் பணத்தை வழங்குகிறது. இங்கு நீங்கள்தான் வங்கிக்கும் கடைக்காரருக்கும் இடையில் வட்டிக்கு புரோக்கராகச் செயல்படுகிறீர்கள். எனவே இதில் வட்டி பரிமாற்றம் நடப்பது உறுதியாகும்.

ஆயினும், இன்றைய சூழலில் வெளிநாடுகளில் அல்லது பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு, இணையவழிப் பரிமாற்றங்கள், விமான டிக்கெட் பதிவு போன்ற அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்குக் கிரெடிட் கார்டு தவிர்க்க முடியாத ஒரு நிர்ப்பந்தமாக மாறிவிடுகிறது.

இப்படி உண்மையாகவே நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் ஒருவர் இருந்தால், தனக்கு எவ்வளவு தேவையோ அந்த குறைந்தபட்ச அளவிலான கார்டை மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் (ப்ளாட்டினம், கோல்டு என ஆடம்பரங்களுக்குப் போகக் கூடாது). இந்த நிர்ப்பந்தத்திற்காக இறைவன் அவரை மன்னிக்கலாம். ஆனால், இதற்காக வட்டி கலந்த அந்த நடைமுறைக்கு "இஸ்லாமிய முறை" (Islamic Credit Card) எனப் பெயர் சூட்டி நியாயப்படுத்துவதுதான் மிகப்பெரிய குற்றமாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →