கேள்வி
இத்தாவுடைய காலத்தில் ஒரு பெண் தன் மகளின் பிரசவ உதவிக்காகவோ அல்லது தனது சிகிச்சைக்காகவோ மருத்துவமனையில் ஒரு வார காலம் தங்கிவிட்டுப் பின் வீடு திரும்பி இத்தா காலத்தைப் பூர்த்தி செய்கிறார்கள். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? குற்றப் பரிகாரம் செய்ய வேண்டுமா?
பதில்
பதில்:
இத்தா என்பது திருமணம் முடிக்காமல் இருப்பதும், ஆபரணங்கள் மற்றும் அலங்காரங்களைத் தவிர்த்து இருப்பதும் ஆகும். அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே செல்வதை இஸ்லாம் தடுக்கவில்லை.
மருத்துவமனைத் தேவைகளுக்காகவோ அல்லது மகளின் பிரசவ உதவிக்காகவோ வெளியே செல்வது நிர்ப்பந்தமான ஒரு சூழலாகும். மார்க்க ரீதியாக இதில் எந்தத் தடையுமில்லை. மருத்துவமனையில் தங்கியிருந்த அந்த ஒரு வார காலமும் இத்தாவின் கணக்கில்தான் சேரும்; அது இத்தாவை முறித்துவிடாது.
தேவையின்றி அலங்கரித்துக்கொண்டு வெளியே செல்வதைத்தான் மார்க்கம் தடுக்கிறது. நிர்ப்பந்தமான, அவசியமான மருத்துவத் தேவைகளுக்கு வெளியே செல்வது தவறல்ல. இதற்கு எந்தக் குற்றப் பரிகாரமும் தேவையில்லை. அந்தப் பெண் மீதமுள்ள இத்தா நாட்களைத் தொடர்ந்து கணக்கிட்டுப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க