திருமணம் முறைப்படி நடந்தால், அதற்குப் பின் அவர்கள் வாழும் வாழ்க்கை இஸ்லாம் அனுமதித்த ஹலாலான வாழ்க்கையாகவே இருக்கும்; அது ஹராமான வாழ்க்கையாக மாறாது.
ஆனால், திருமணத்திற்கு முன்னால் அவர்கள் தங்களுக்குள் அந்நியர்களாக இருக்கும் நிலையில் பேசிக் கொள்வதை இஸ்லாம் செவியால் மற்றும் நாவால் செய்யப்படும் விபச்சாரமாக (ஒழுக்கக் கேடாக) கருதுகிறது. உலகத்தில் இதற்கு நேரடித் தண்டனை இல்லாவிட்டாலும், இது மார்க்க ரீதியாக ஒரு பாவமாகும். எனவே, திருமணத்திற்குப் பின் அவர்கள் இதற்காக இறைவனிடம் மனமுருகித் தவ்பா (பாவமன்னிப்பு) செய்ய வேண்டும்.
இது போன்ற மார்க்கத்திற்கு முரணான செயல்பாடுகளுடன் ஆரம்பிக்கப்படும் பல திருமண வாழ்க்கையில் பரக்கத் (அருள்) இல்லாமல் போய், சில வருடங்களிலேயே கசந்து முறிந்து போவதைப் பார்க்கிறோம். எனவே, பாவத்திற்காகத் தவ்பா செய்ய வேண்டுமே தவிர, முறையான திருமணத்திற்குப் பின்னால் உள்ள வாழ்க்கையை அது சட்ட ரீதியாகப் பாதிக்காது.