கேள்வி
தொழுகையில் சுஜூதில் இருக்கும்போது துஆவாக அல்குர்ஆன் வசனங்களை (உதாரணமாக ரப்பனா ஆத்தினா போன்ற துஆக்களை) ஓதலாமா?
பதில்
பதில்:
சுஜூதிலே குர்ஆனை ''ஓதுவது'' (திருக்குர்ஆன் ஓதும் எண்ணத்தில்) கூடாது. "நான் சுஜூதிலே குர்ஆன் ஓதுகிறேன், ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மை கிடைக்க வேண்டும்" என்ற நியத்தோடு (எண்ணத்தோடு) ஓதினால் அது சுஜூதில் குர்ஆன் ஓதுவதாக மாறிவிடும், அது மார்க்க ரீதியாகக் கூடாது.
ஆனால், குர்ஆன் அல்லது ஹதீஸில் வந்துள்ள துஆக்களை ''பிரார்த்தனை'' (துஆ) என்ற எண்ணத்தில் சுஜூதிலே தாராளமாகக் கேட்கலாம். நீங்கள் உங்களுடைய தேவைகளுக்காக இறைவனிடம் துஆ கேட்கும் எண்ணத்தோடு குர்ஆனில் உள்ள துஆக்களையோ அல்லது ஹதீஸில் வந்த துஆக்களையோ சுஜூதில் கேட்பதில் எவ்விதத் தடையுமில்லை. சுஜூதில் உங்களது பிரார்த்தனைகளை அதிகப்படுத்துங்கள் என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால், துஆ என்ற நோக்கத்தில் குர்ஆன் வசனங்களைக் கேட்பது அனுமதிக்கப்பட்டதேயாகும்.
வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க