ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

தீமைகளைத் தடுத்தால் பல பிரச்சினைகள் வருகின்றனவே, அதனைத் தடுக்காமல் சகித்துக்கொள்வதால் நமக்கு நற்கூலி கிடைக்குமா?

ஹதீஸ்

← முந்தையஅடுதது →
கேள்வி
தீமைகளைத் தடுத்தால் பல பிரச்சினைகள் வருகின்றனவே, அதனைத் தடுக்காமல் சகித்துக்கொள்வதால் நமக்கு நற்கூலி கிடைக்குமா?
பதில்
பதில்:

இஸ்லாத்தின் அடிப்படையே நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதாகும். குடும்பமாக இருந்தாலும், சமூகமாக இருந்தாலும் ஒரு தீமையைக் காணும் போது அதனைத் தடுத்து, நன்மையை ஏவ வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும்.

அல்குர்ஆன் சுட்டிக்காட்டுவது போன்று, "உண்மையைக் கொண்டு உபதேசிப்பார்கள்; மேலும் பொறுமையைக் கொண்டு உபதேசிப்பார்கள்" என்பதே முஃமின்களின் பிரதான பண்பாகும். இங்குப் பொறுமை (சப்ர்) என்பது, தீமையைக் கண்டு சகித்துக்கொண்டு மௌனமாக இருப்பதல்ல; மாறாக, நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் போது ஏற்படும் கஷ்டங்களையும் எதிர்ப்புகளையும் சகித்துக்கொண்டு தொடர்ந்து அந்த நற்பணியைச் செய்வதையே குறிக்கிறது.

உதாரணமாக, குடும்பத்தினரைத் தொழுகைக்கு ஏவுவதை பல வருடங்கள் எவ்விதச் சலிப்புமின்றித் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும். தீமையைத் தடுக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளைப் பொறுமையோடு எதிர்கொள்வதில்தான் மாபெரும் நற்கூலி உள்ளதே தவிர, தீமையைக் கண்டு வாய்மூடிச் சகித்துக்கொள்வதில் மார்க்க ரீதியாக எவ்வித நன்மையும் கிடையாது.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →