கேள்வி
கோவிட்-19 மூலம் மரணித்தவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்த முடியுமா?
பதில்
பதில்:
கோவிட்-19 போன்ற கொடிய தொற்றுநோய்களால் மரணித்தவர்களைக் குளிப்பாட்டுவதோ, கபனிடுவதோ தமக்கும் பிறருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பகமான மருத்துவர்கள் கூறினால், அவர்களைக் குளிப்பாட்டவோ கபனிடவோ தேவையில்லை. ஆனால், அதற்காக அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது என்பது கிடையாது.
உடல் பாதுகாப்பாகப் பொதி செய்யப்பட்ட நிலையில், தூரத்திலிருந்தேனும் அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தி, இறைவனிடம் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். "குளிப்பாட்டி கபனிட முடியாவிட்டால் ஜனாஸா தொழுகையும் கிடையாது, அடக்கம் மட்டும்தான்" என சிலரால் கூறப்படும் கருத்துக்களுக்கு மார்க்கத்தில் எவ்வித நியாயமான முகாந்தரமும் இல்லை.
எனவே, பாதுகாப்பான முறைகளைப் பேணி ஜனாஸா தொழுகையை நிறைவேற்றுவதே மார்க்க வழிகாட்டலாகும்.
வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க