ஹதீஸ்களைத் தரம் பிரிப்பதற்கான பிரதான காரணம், ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்ற உறுதியான செய்தி வந்த பின்னால்தான் அதனைச் செயல்பட வேண்டும் என்பதாகும். கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் அதனை மார்க்கமாக எடுக்கக் கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் (மௌளூஉ):
அறிவிப்பாளர் வரிசையில் ஒரு பொய்யர் இருந்தால், அல்லது சாதாரண பலகீனமானவர் இருந்து இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கக்கூடிய ஒரு கருத்தைச் சொல்லியிருந்தால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.
பலவீனமான ஹதீஸ் (ழயீஃப்):
அறிவிப்பாளர் வரிசையில் ஒரு மனித பலகீனம், மறதி அல்லது செய்தியை மாற்றி மாற்றி அறிவிக்கும் தன்மை இருந்து, அந்த ஹதீஸ் நபிகளாரால் சொல்லப்பட்டதா இல்லையா என்ற சந்தேகம் வந்தால் அது பலவீனமான ஹதீஸாகும். சொல்லியும் இருக்கலாமே என்பதற்காக மறுமையில் அல்லாஹ் கேள்வி கேட்கப் போவதில்லை. நபிகளார் சொன்னார்கள் என்று உறுதியானால் மட்டுமே அதனை மார்க்கமாக எடுக்க முடியும்.
எனவே, பலவீனம் என்பது நபிகளார் சொன்னார்களா என்று சந்தேகப்படுகின்ற அமைப்பில் வருவது; இட்டுக்கட்டப்பட்டது என்பது பொய்யர்கள் அல்லது அடிப்படைகளுக்கு முரணான கருத்துக்களோடு வருவது. ஸஹீஹான ஹதீஸ் இல்லாத பட்சத்தில், பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாக வைத்து அமல் செய்ய மார்க்கத்தில் எவ்வித அனுமதியும் கிடையாது.