Dr. ஷேக் முபாரக் மதனி

வுழூ செய்த பின் அழகுசாதனப் பொருட்களை (Cosmetics) பயன்படுத்தினால் வுழூ நீங்குமா (முறியுமா)?

வுழூ அழகுசாதனப் பொருட்கள் மேக்கப் தூய்மை

← முந்தையஅடுதது →
கேள்வி
வுழூ செய்த பின் அழகுசாதனப் பொருட்களை (Cosmetics) பயன்படுத்தினால் வுழூ நீங்குமா (முறியுமா)?
பதில்
பதில்:

வுழூவை முறிக்கக்கூடிய காரியங்கள் எவை என்பதை இஸ்லாம் மிகத் தெளிவாக அடையாளப்படுத்தியுள்ளது. அனைத்து அறிஞர்களாலும் ஏகோபித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வுழூவை முறிக்கும் காரியங்கள் மூன்று: 1. முன் அல்லது பின் துவாரங்களால் சிறுநீரோ, மலமோ அல்லது காற்றோ வெளியேறுவது. 2. தன்னிலை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபடுவது. 3. ஒட்டக இறைச்சியைச் சாப்பிடுவது. இவை தவிர அந்நியப் பெண்களைத் தொடுவது அல்லது மர்மஸ்தானத்தைத் தொடுவது போன்றவற்றால் வுழூ முறியுமா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

ஆனால், பொதுவாக ஒரு காரியத்தால் வுழூ முறிய வேண்டும் என்றால் அதற்கு அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டல் இருக்க வேண்டும். வுழூ செய்து முடித்தபின் உடலில் ஒரு நஜீஸ் (அசுத்தம்) பட்டால் கூட அதற்காக வுழூ முறிந்துவிடாது; அந்த நஜீஸ் பட்ட இடத்தை அல்லது ஆடையை மாற்றிக் கொண்டு கழுவிவிட்டாலே போதுமானது. வுழூ அப்படியே தொடரும்.

அந்த வகையில், வுழூ செய்த பின் அழகுசாதனப் பொருட்களை (மேக்கப்/Cosmetics) பயன்படுத்துவதனால் எக்காரணம் கொண்டும் வுழூ முறியாது. அந்த அழகுசாதனப் பொருட்களில் நஜீஸ் கலந்திருப்பதாகச் சந்தேகப்பட்டாலும், அல்லது அது தூய்மையானதாக இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவதனால் செய்த வுழூ பாழாகாது. அந்த வுழூவைக் கொண்டு தாராளமாகத் தொழலாம்.

← முந்தையஅடுதது →