Dr. ஷேக் முபாரக் மதனி

வீடுகளில் பூனை வளர்க்கலாமா? அது நஜீஸாகுமா?

பூனை செல்லப்பிராணி தூய்மை விலங்குகள்

← முந்தையஅடுதது →
கேள்வி
வீடுகளில் பூனை வளர்க்கலாமா? அது நஜீஸாகுமா?
பதில்
பதில்:

வீடுகளில் மார்க்கம் அனுமதித்த செல்லப்பிராணிகள் மற்றும் பறவைகளை வளர்ப்பதற்கு இஸ்லாத்தில் முழுமையான அனுமதி உள்ளது. உமைர் (ரலி) என்ற சிறுவர் 'நுகைர்' என்ற ஒரு குருவியை வளர்த்ததும், அது இறந்தபோது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு ஆறுதல் கூறியதும் ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது. அதே அடிப்படையில் வீடுகளில் பூனையையும் தாராளமாக வளர்க்கலாம்.

மிகப் பிரபலமான நபித்தோழரான அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹர் (ரலி) அவர்கள் எப்போதும் ஒரு பூனையோடு மிக நெருக்கமாக இருந்து, அதைப் பராமரித்து வந்த காரணத்தினாலேயே அவருக்கு "அபூ ஹுரைரா" (குட்டிப் பூனையின் தந்தை) என்ற சிறப்புப் பெயர் வந்தது. அவர் வெளியில் செல்லும்போதும் பூனையைக் கொண்டு செல்வார், வரும்போதும் கொண்டு வருவார். இந்தச் செயலை யாரும் கண்டிக்கவில்லை.

மேலும், பூனை நஜீஸ் (அசுத்தம்) கிடையாது. வுழூ செய்யும் பாத்திரத்தில் இருந்த தண்ணீரை ஒரு பூனை வந்து குடித்தபோது, மக்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "பூனை நஜீஸ் கிடையாது; அது உங்களிடத்தில் நெருக்கமாக வந்து பழகிப் போகக்கூடிய பிராணி" என்று கூறி, அந்தத் தண்ணீரிலேயே வுழூ செய்தார்கள். எனவே பூனையை வீட்டில் வளர்ப்பதில் எந்தத் தடையுமில்லை, அது நக்கிய பாத்திரங்களோ தண்ணீரோ நஜீஸ் ஆகாது.

← முந்தையஅடுதது →