Dr. ஷேக் முபாரக் மதனி

வீடுகளில் நாய் வளர்ப்பது மார்க்கத்தில் கூடுமா?

நாய் செல்லப்பிராணி வீடுகள் மலக்குகள்

← முந்தையஅடுதது →
கேள்வி
வீடுகளில் நாய் வளர்ப்பது மார்க்கத்தில் கூடுமா?
பதில்
பதில்:

வீடுகளில் நாய் வளர்ப்பதை இஸ்லாம் வன்மையாகத் தடை செய்துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும்போது, யாரொருவர் நாயை எடுத்து வளர்க்கிறாரோ, அவருடைய ஒவ்வொரு நாளைய நன்மைகளிலிருந்தும் ஒரு கீராத் (இன்னொரு அறிவிப்பில் இரண்டு கீராத்) அளவு நன்மைகள் குறைந்து கொண்டே போகும் என்று எச்சரித்துள்ளார்கள். ஒரு கீராத் என்பது உஹது மலையின் அளவைக் குறிக்கும். எனவே, வீட்டில் நாய் வைத்திருப்பதனால் மலை அளவிலான நன்மைகள் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே போகும்.

மேலும், "நாய் மற்றும் உருவப்படங்கள் இருக்கும் வீடுகளுக்குள் ரஹ்மத்துடைய மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள்" என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ஒரு செல்லப்பிராணியாக வீட்டில் நாய் வளர்ப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்ட ஹராமான செயலாகும்.

அதேநேரத்தில், மார்க்கம் சில அவசியத் தேவைகளுக்காக நாய்களை வளர்க்க விதிவிலக்கு அளித்துள்ளது. வேட்டையாடுவதற்காகப் பயிற்றுவித்து நாய் வளர்ப்பது, விவசாயம் மற்றும் கால்நடைகளைப் பாதுகாப்பதற்காகக் காவல் காக்க நாய் வளர்ப்பது ஆகியவற்றுக்கு மார்க்கத்தில் முழுமையான அனுமதி உள்ளது. இக்காரணங்கள் இன்றி வீடுகளுக்குள் நாயை வளர்ப்பது கூடாது.

← முந்தையஅடுதது →