Dr. ஷேக் முபாரக் மதனி

மாதவிடாய் அல்லது நிஃபாஸ் (பிரசவத் தீட்டு) உள்ள பெண்கள் உழ்ஹிய்யா (குர்பானி) கொடுக்கலாமா? அல்லது பிராணியை அறுக்கலாமா?

குர்பானி தூய்மை பெண்கள் சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
மாதவிடாய் அல்லது நிஃபாஸ் (பிரசவத் தீட்டு) உள்ள பெண்கள் உழ்ஹிய்யா (குர்பானி) கொடுக்கலாமா? அல்லது பிராணியை அறுக்கலாமா?
பதில்
பதில்:

மாதவிடாய் அல்லது பிரசவத் தீட்டோடு (நிஃபாஸ்) இருக்கும் பெண்கள் உழ்ஹிய்யா கொடுப்பதற்கு நிய்யத் வைப்பதற்கோ அல்லது உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதற்கோ மார்க்கத்தில் எவ்விதத் தடையும் கிடையாது.

மேலும், ஆடு, மாடு, ஒட்டகம், கோழி போன்ற பிராணிகளை இஸ்லாமிய முறையில் அறுப்பதற்குப் ஆண்களைப் போன்று பெண்களுக்கும் முழு அனுமதி உள்ளது; இதற்கு அவர்கள் மாதவிடாயோடு இருப்பது ஒரு தடையாகாது. எனவே, மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள் தங்கள் உழ்ஹிய்யா பிராணியைத் தாங்களே அறுக்க விரும்பினாலும் தாராளமாக அறுக்கலாம்.

← முந்தையஅடுதது →