கேள்வி
மாமியாரால் ஏற்படும் மன உளைச்சல்களையும் கொடுமைகளையும் மருமகள் தன் கணவனிடம் கூறுவது புறம் பேசுதல் ஆகுமா?
பதில்
பதில்:
மாமியார் மருமகளைத் தன் வீட்டுக்கு வந்த அடிமையைப் போலக் கருதுவது முற்றிலும் தவறானதாகும். மாமியாரின் கொடுமைகளைச் சகித்து வாழும் ஒரு மருமகள், தன் மன ஆறுதலுக்காக மாமியாரின் கொடுமைகளைக் கணவனிடம் கூறுவதில் தவறில்லை.
அதேபோன்று, தான் படும் கஷ்டங்களைக் கணவன் மூலமாக மாமியாரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பார் என்ற நேர்மறையான நோக்கத்திலோ மாமியாரின் பிரச்சனைகளைக் கணவனிடம் கூறுவது மார்க்கத்தில் புறம் பேசுதல் (கீபத்) என்ற குற்றத்தில் சேராது.