கேள்வி
மாதவிடாயோடு இருக்கிற மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் என்ன கஃப்பாரா (பரிகாரம்) கொடுக்க வேண்டும்?
பதில்
பதில்:
மாதவிடாய் காலத்தில் மனைவியின் மர்ம உறுப்பில் உடலுறவு கொள்வதை அல்குர்ஆன் வன்மையாகத் தடை செய்துள்ளது (ஹராம்). உடலுறவைத் தவிர்த்து மற்றவாறு மனைவியுடன் கூடி இருப்பதற்கு மட்டுமே அனுமதியுள்ளது. இந்தத் தடையை மீறி மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டவர், நபி (ஸல்) அவர்கள் மீது அருளப்பட்டதை நிராகரிக்கும் குற்றத்திற்குச் சமமான பெரும் பாவத்தைச் செய்தவராவார்.
மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டவர் அரை தீனார் கஃப்பாரா கொடுக்க வேண்டும் என்று வரும் ஹதீஸ்கள் பலவீனமானவை எனப் பெரும்பாலான ஹதீஸ் வல்லுநர்கள் கூறியுள்ளனர். எனவே, இதற்கு எவ்விதப் பொருளாதார கஃப்பாராவும் கிடையாது; ஆனால், செய்த பெரும் பாவத்திற்காக அல்லாஹ்விடம் உளப்பூர்வமாகத் தவ்பா (பாவமன்னிப்பு) செய்து திருந்துவது கட்டாயமாகும்.