கேள்வி
உலகத்தில் கணவன் மனைவியாக வாழக்கூடியவர்கள் மறுமையில் சுவர்க்கத்திலும் கணவன் மனைவியாக இருப்பார்களா?
பதில்
பதில்:
உலகத்தில் நல்லவர்களாக, ஈமான் கொண்டவர்களாக, இணைவைக்காதவர்களாக வாழ்ந்து மரணித்த கணவனும் மனைவியும் சுவர்க்கத்திற்கு நுழைவிக்கப்படுவார்கள் என அல்குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது. எனவே, இந்த உலகத்தில் நல்லவர்களாக வாழ்ந்தவர்கள் சுவர்க்கத்திலும் கணவன் மனைவியராகவே சந்தோஷமாக இணைந்து வாழ்வார்கள்.
மேலும், உலகத்தில் நல்லவர்களாக வாழ்ந்து சுவர்க்கம் செல்லும் பெண்கள், சுவர்க்கத்தில் பிரத்யேகமாகப் படைக்கப்படும் ஹூருன் ஈன்களை விடவும் பல மடங்கு சிறந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்கள் என ஷேக் உஸைமீன் (ரஹ்) போன்ற அறிஞர்கள் விளக்குகின்றனர்.