Dr. ஷேக் முபாரக் மதனி

பெற்றோர் இழைத்த பாவங்களுக்காகவோ தவறுகளுக்காகவோ அவர்களுடைய பிள்ளைகள் இம்மையிலோ அல்லது மறுமையிலோ தண்டிக்கப்படுவார்களா?

பெற்றோர் பிள்ளைகள் பாவம் கழா கத்ர்

← முந்தையஅடுதது →
கேள்வி
பெற்றோர் இழைத்த பாவங்களுக்காகவோ தவறுகளுக்காகவோ அவர்களுடைய பிள்ளைகள் இம்மையிலோ அல்லது மறுமையிலோ தண்டிக்கப்படுவார்களா?
பதில்
பதில்:

"ஒவ்வொரு மனிதனும் அவன் தேடியதே அவனுக்குக் கிடைக்கும்" என்றும், "ஒரு ஆத்மாவின் பாவச் சுமையை மற்றொரு ஆத்மா சுமக்க மாட்டாது" (அல்குர்ஆன்) என்றும் இஸ்லாம் மிகத் தெளிவான பொது விதியைக் கூறுகிறது. இந்தப் பொது விதியின் அடிப்படையில், பெற்றோர் செய்யக்கூடிய பாவங்களுக்கும் தவறுகளுக்கும் பிள்ளைகள் ஒருபோதும் அல்லாஹ்விடத்தில் பொறுப்பாளிகள் ஆக மாட்டார்கள்.

பெற்றோர்கள் நல்லவர்களாகவும் முன்மாதிரியானவர்களாகவும் இருப்பது பிள்ளைகளிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், பெற்றோர் செய்த தவறுக்காகப் பிள்ளைகள் தண்டிக்கப்பட மாட்டார்கள். சில பிள்ளைகள் பிறக்கும்போதே அங்கவீனமாகவோ குறைபாட்டோடோ பிறப்பதைக் கண்டு, "பெற்றோர் செய்த பாவத்தினால்தான் இது நிகழ்ந்தது" என்று சிலர் கூறுவது முற்றிலும் தவறான நம்பிக்கையாகும்.

அதேநேரம், பெற்றோர் தவறு செய்கிறார்கள் அல்லது பாவம் செய்கிறார்கள் என்பது தெரிந்தால், அதைக் கண்ணியமாகவும் மென்மையாகவும் பக்குவமாகவும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டுவது பிள்ளைகளின் கடமையாகும். யார் தவறு செய்தாலும் அதனை மென்மையாகச் சுட்டிக்காட்டத் தவறுபவர் அல்லாஹ்விடத்தில் குற்றவாளியாகக் கருதப்படுவார். ஆனால், பெற்றோர் செய்த மூலப் பாவத்திற்காகப் பிள்ளைகள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டார்கள்.

← முந்தையஅடுதது →