அஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மா பிரயாணம் மற்றும் தொழில் போன்ற காரணங்களுக்காக சுபஹு தொழுகையை உரிய நேரத்தை விட முற்படுத்த தொழுவதற்கு மார்க்கத்திலே அனுமதி இருக்கிறதா என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [8]. அன்புள்ள சகோதர சகோதரிகளே ஒவ்வொரு முஸ்லிமும் ஐந்து நேரம் தொழுகையை நிறைவேற்றுவது ஃர்ஐன் கட்டாய கடமை என்பதை நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம் [8]. இந்த தொழுகைகளை ஒருவர் வேண்டுமென்று தவறவிட்டால் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுகிறார் என்கிற பத்துவாவை உலமாக்கள் வழங்கி இருக்கிறார்கள் [8]. இந்த தொழுகையை பொறுத்தவரையில் தொழுகைக்கு நேரம் குறிக்கப்பட்டிருக்கிறது என்று அல்லாஹ் அல்குர்ஆனிலே சொல்லிக் காட்டுகிறான் [8]. சூரத்து நிஸா 103வது வசனத்திலே அல்லாஹுத்தஆலா சொல்லும்போது இன்னலாத்த கான கிதாபத்தா நிச்சயமாக தொழுகை மூமின்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட ஒரு கடமையாக இருக்கிறது என்று அல்லாஹுத்தஆலா சொல்கிறான் எனவே தொழுகைக்கு என்று ஒரு குறிப்பிட்ட ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் பிக்ஸ் பண்ணப்பட்டிருக்கிறது [8].
அந்த நேரத்தில் அந்த தொழுகையை நிறைவேற்றி விட வேண்டும் [9]. அந்த தொழுகைகளின் உடைய ஆரம்ப நேரம் எது முடிவு நேரம் எது என்கிற விவரங்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள் [9]. அந்த அடிப்படையில் நம்முடைய கண்ணியத்திற்குரிய உலமாக்கள் தொழுகையினுடைய நேரங்களை நவீன காலத்திலும் நிர்ணயித்து இது தொழுகையினுடைய ஆரம்ப நேரம் இது முடிவு நேரம் என்பதை நமக்கு அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் [9]. எனவே இந்த நேரத்திற்குள் குறிப்பிட்ட தொழுகைகளை நாம் தொழுது கொள்ள கடமைப்பட்ட ருக்கிறோம் குறிப்பாக பிரயாணங்கள் செய்யக்கூடியவர்கள் அல்லது கடல் தொழில் போன்ற தொழில்களை செய்யக்கூடியவர்கள் அதிகாலையில் நேரத்தோடு அவர்கள் அவற்றில் ஈடுபட வேண்டி வருகிறது [9]. ஏழியாக பிரயாணம் போவார் [9]. ஏழியாக கடலுக்கு செல்வார் இதுபோன்று ஏனைய தொழில்களுக்கு பஜ்ருடைய நேரத்திற்கு முன்னர் பிரயாணங்களை மேற்கொள்ள கூடியவர்கள் இருக்கிறார்கள் இவ்வாறானவர்கள் தொழுகையாளிகள் அந்த தொழுகையாளிகள் சிலர் பஜிருக்கு முன்னரேயே பஜிரை தொழுதுவிட்டு போகிற ஒரு பழக்கத்தை உடையவர்களாக இருக்கிறார்கள் [9]. இவ்வாறான சகோதரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் [9].
ஒவ்வொரு தொழுகைக்கும் பஜிர் என்றால் பஜிருடைய ஒரு ஆரம்ப நேரம் இருக்கிறது முடிவு நேரம் இருக்கிறது [10]. இந்த ஆரம்ப நேரத்திற்கும் முடிவு நேரத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் தான் பஜ்ரை தொழ வேண்டும் [10]. பஜிரினுடைய நேரத்திற்கு முன்னர் பஜிரை தொழுதால் அது பஜிரு தொழுகையாக கருதப்பட மாட்டாது [10]. அவ்வாறு தொழுத ஒருவர் கண்டிப்பாக அந்த தொழுகையை மீட்டி தொழ வேண்டும் [10]. அவருடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது [10]. அதே நேரத்தில் உரிய நேரத்தை விட்டு தொழுகையை பிற்படுத்துவது மிக ஆபத்தான ஒரு குற்றமாக காணப்படுகிறது [10]. சில அறிஞர்களுடைய கருத்துப்படி அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுகிறார் [10]. எனவே அன்புள்ள சகோதர சகோதரிகளே எந்த காரணமாக இருந்தாலும் நாம் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் [10]. தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் [10]. தொழுகைக்குரிய நேரத்தை விட்டு முற்படுத்துவதோ அல்லது பிற்படுத்துவதோ கூடாது [10]. இதற்குரிய இம்பார்ட்டன்ஸ் முக்கியத்துவம் நம்முடைய மனங்களில் ஆழமாக பதிய வேண்டும் [10].
ஏனென்றால் நாளை மறுமையிலே அல்லாஹ் நம்மை விசாரிக்கிற போது முதலாவது கேட்கிற கேள்வி தொழுகையை பற்றித்தான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லிக் காட்டுகிறார்கள் [11]. எனவே இந்த விஷயத்தில் எல்லோரும் கவனமாக இருந்து உரிய நேரங்களில் தொழுது கொள்வதற்கு முயற்சிய வேண்டும் அல்லாஹுத்தஆலா அதற்கு நம் எல்லோருக்கும் தவபீக் செய்வானாகவான அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ [11].