Dr. ஷேக் முபாரக் மதனி

பித்அத் செய்கின்ற கணவனிடம் மனைவி எப்படி நடந்து கொள்வது? அவனோடு வாழலாமா?

பித்அத் கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை அல்லாஹ்

← முந்தையஅடுதது →
கேள்வி
பித்அத் செய்கின்ற கணவனிடம் மனைவி எப்படி நடந்து கொள்வது? அவனோடு வாழலாமா?
பதில்
பதில்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபாத் பிதத் செய்கின்ற கணவனிடம் மனைவி எப்படி நடந்து கொள்வது என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [3]. இஸ்லாத்திலே பித்அத் என்பது வழிகேடு என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிக் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள் குல்லு பிதத்தின் வலா எல்லா பிதத்துக்களும் வழிகேடாகும் [3]. இந்த மார்க்கத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டல்கள் இல்லாமல் மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்படக்கூடிய அனைத்தும் பிதத்துக்கள் ஆகும் [3]. இந்த பிதத்துக்கள் அனைத்துமே தவிர்க்கப்பட வேண்டும் [3]. அதிலும் குறிப்பாக உலமாக்கள் பிதத்தை இரண்டு பெரும் பகுதிகளாக பிரிக்கிறார்கள் [3]. ஒன்று பிதா முகப்பிரா என்ற இஸ்லாத்தை விட்டு வெளியேற்றக்கூடிய பிதத்துக்கள் இன்னுமொன்று பிதஆ முபாஸிக்கா என்று சொல்லக்கூடிய இஸ்லாத்தை விட்டு வெளியேற்றாத அதை செய்கிறவனை பாவியாக ஆக்கக்கூடிய பித்அத் [3].

இதிலே பித்ஆ முகப்பிரா என்ற இஸ்லாத்தை விட்டு வெளியேற்றக்கூடிய பித்அத்துகளை ஒருவர் செய்வாராக இருந்தால் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியே போய்விடுவார் [4]. உதாரணமாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி தூதர் என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான ஒரு கோட்பாடாகும் [4]. இதற்கு மாற்றமாக ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகும் ஒரு நபி வர முடியும் என்று சொன்னால் அந்த கருத்து பிதத்தானதாகும் [4]. இந்த பிதஅத்தை ஒருவர் ஏற்றுக்கொண்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகு ஒரு நபி வரல [4]. என்கிற இந்த பிதத்தை ஒருவர் ஏற்றுக்கொண்டால் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுகிறார் [4]. இவ்வாறான ஒருவரை முஸ்லிமாக கருத முடியாது [4]. அவருக்கு பின்னால் நின்று தொழ முடியாது அவர் அறுக்கிற பிராணிகளை சாப்பிட முடியாது அதேபோல அவரோடு அவருடைய மனைவி சேர்ந்து வாழவும் முடியாது [4]. அதே நேரத்தில் பிதா முஃபசிஸ்கா செய்யக்கூடிய ஒருவரை பொறுத்தவரையில், அவர் பாவம் செய்கிறார் [4]. அந்த பாவம் சில நேரங்களில் பெரும் பாவமாகவும் இருக்கும் [4]. சில நேரங்களில் சிறிய பாவமாகவும் இருக்கும் [4].

இந்த பிதா முபசிகாவை செய்யக்கூடிய ஒரு சகோதரர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவதில்லை இதுதான் அஹலு சுன்னாவல் ஜமாத்தை சேர்ந்த உலமாக்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வழங்கி இருக்கக்கூடிய தீர்ப்பாகும் [5]. எனவே அவரை அந்த பிதத்தில் இருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளை நாம் முடியுமானவரை செய்து கொண்டிருக்க வேண்டும் [5]. அவருக்கு அதை பிதத் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் [5]. அது பித்அத் என்பதை அவர் புரிந்து கொள்கிற வரைக்கும் அதற்கான சான்றுகளை அவருக்கு எடுத்து காண்பிக்க வேண்டும் [5]. அவருக்காக துவா செய்ய வேண்டும் [5]. இவ்வாறு அவரை அந்த பிதத்தில் இருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும் [5]. ஆனால் அவர் இஸ்லாம் என்கிற அந்த வட்டத்திலிருந்து வெளியேறி விடுவதில்லை [5]. எனவே அவர் தொழுகை நடத்தினால் பின்னால் நின்று தொழலாம் [5]. அதேபோல கணவன் பிதத் செய்கிறான் என்று சொன்னால் மனைவி அந்த கணவனோடு சேர்ந்து வாழலாம் [5].

ஆனால் எப்படி பொதுவாக செய்யப்பட்ட பாவங்களில் நாம் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோமோ அதுபோல இந்த பிதத்துகளிலும் அவருக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க கூடாது ஒத்துழைப்பு கொடுக்காமல் அவரோடு சேர்ந்து வாழ்வதற்கு மார்க்கத்திலே வழிகாட்டப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் வல்லாஹுத்தஆலா ஆலம் [6]. எமது நிகழ்ச்சிகளை வாயிலாக தொடர்ச்சியான பயான்களை பார்வையிட டாக்டர் முபாரக் மதனி அபிஷயல் எனும்ய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் [7].

← முந்தையஅடுதது →