அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸலாம் அலா ரசூலில்லாஹ அம்மாப பிராணிகளை அறுக்கும்போது வலதுகை வளமம் இல்லாதவர் இடது கையினால் அறுக்கலாமா என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [12]. அன்புள்ள சகோதர சகோதரிகளே பொதுவாக இஸ்லாத்தை பொறுத்தவரையில் நல்ல காரியங்களுக்கு வலதை முற்படுத்துவது என்பது வலியுறுத்தப்பட்டிருக்கிறது [12]. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொதுவாக சொல்லுகிற போது அவர்களைப் பற்றி சொல்லுகிற போது யுதயம்னு குல்லி ரசூல் ஸல்லல்லாஹு அஸல்லம் அவர்கள் தலை சீவுவது செருப்பணிவது போன்ற எல்லா காரியங்களிலும் வலதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று ஹதீஸ்களில் குறிப்பிடப்படுகிறது [12]. எனவே நாம் நல்ல காரியங்களுக்கு வலதை முற்படுத்த வேண்டும் [12]. அந்த வகையிலேதான் பிராணிகளை அறுக்கிற போதும் வலதை முற்படுத்த வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [12]. அதே நேரத்திலே பிராணிகளை அறுப்பது பற்றி தனியாக வருகிற செய்திகள் எதிலுமே வலதை நாம் முற்படுத்த வேண்டும் என்று தனியாக வலியுறுத்தப்படவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் [12].
அதே நேரத்தில் அறுக்கிற போது ஒழுங்காக அறுக்க வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்தி இருக்கிறதும் நீங்கள் அறுத்தால் நல்ல முறையில் அறுங்கள் என்று சொல்லப்படுகிற அதே நேரத்தில் அதாவது அறுக்கப்படுகிற பிராணிக்கு ரிலாக்ஸ் கொடுக்க வேண்டும் அதாவது அதை கஷ்டப்படுத்தாமல் அறுக்க வேண்டும் என்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து பார்க்கிற போது அன்புள்ள சகோதர சகோதரிகளே ஒருவர் வலது கையினால் அறுக்கிற போது அந்த பிராணிக்கு ஆறுதலை கொடுத்து ரிலாக்ஸாக அதை அறுக்க முடியும் [13]. சிலர் அவர்களுடைய வலது கை வளம் இல்லாமல் இடது கைதான் வளமாக இருக்கிறது என்று சொன்னால் அவர்கள் இடது கையினால் அறுக்கிற போதுதான் அந்த பிராணிக்கு ரிலாக்ஸ் கிடைக்கும் என்று சொன்னால் அவர் இடது கையினால் அறுத்து கொள்ளலாம் அதிலே எந்த பிரச்சனையும் இல்லை அவர் பாவம் செய்தவராகவோ குற்றம் செய்தவராகவோ கருதப்பட மாட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் அல்லாஹுத்தஆலாம் எமது நிகழ்ச்சிகளை வாயிலாக தொடர்ச்சியான பயான்களை பார்வையிட டாக்டர் முபாரக் மதனி அபிஷயல் எனும்ய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் [13].