14 வயது ஆண் பிள்ளை போன வருடம் நான்கு நோன்பு வைக்கவில்லை. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்துவிட்டது. அதன் நிலை என்ன என்று கேட்கிறார்கள் [5]. அல்லாஹுத்தஆலா அந்த சகோதரருக்கு சொர்க்கத்தை கொடுக்க வேண்டும் [5]. 14 வயது என்பது பெரும்பாலும் பருவ வயதை அடைந்த ஒரு நிலையாகும் [5]. இப்ப பருவ வயதை அடைந்த ஒருவரை பொறுத்தவரையில் அவர் நோன்பு இருப்பது கடமையாகும் [5]. நோன்பு கடமையான ஒருவர் நோன்பை பிடிக்காத நிலையில் மௌத்தானால் அதாவது நோன்பு கலாவாக இருக்கிற நிலையில் மௌத்தானால் அதற்குரிய சட்டம் என்ன என்பதை பொறுத்தவரையில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லுகிறார்கள் மன்மா அலைஹிசமுன் சாமன்வலியு யார் ஒருவர் நோன்பு அவர் மீது கடமையான நிலையில் மௌத் ஆகிறாரோ அவருடைய பொறுப்பாளர்கள் அந்த நோன்பை அவருக்காக வேண்டி பிடிப்பார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் [5]. அப்ப ஒருவர் மௌத் ஆகி விடுகிறார் அவருக்கு கலா நோன்பு இருக்கிறது என்று சொன்னால் அவருடைய வழிகள் பொறுப்பாளர்கள் அந்த நோன்பை பிடிக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் நமக்கு சொல்கிறது [5]. புகாரி முஸ்லிமிலே இந்த செய்தி பதிவாகி இருக்கிறது [5].
அதே நேரத்தில் அஹ்மதிலே பதிவாகி இருக்கிற ஒரு ஹதீஸில், ஒரு பெண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, யா ரசூலல்லாஹ் என்னுடைய தாய் அவருக்கு ஒரு மாத கால நோன்பு கடமையான நிலையில் மௌத்தாகிவிட்டார் [6]. அவருக்காக அந்த நோன்பை நான் கலா செய்யலாமா என்று கேட்டபோது, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த பெண்மணியிடம் கேட்டார்கள் [6]. உன்னுடைய தாய்க்கு கடன் இருந்தால், அந்த கடனை நீ நிறைவேற்றுவீரா இல்லையா என்று கேட்டார [6]. அப்போ அந்த பெண்மணி சொன்னார் ஆம் யா ரசூலல்லாஹ் நான் நிறைவேற்றுவேன் என்று சொன்னபோது அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள் அல்லாஹ்வுக்கு கொடுக்க வேண்டிய கடனை நிறைவேற்றுவது மிக முக்கியமாகும் என்று அவருக்கு வழிகாட்டினார்கள் என்பதை பார்க்கிறோம் [6]. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்த மௌத்தான சகோதரரின் விடுபட்ட நான்கு நோன்புகளையும் அவருடைய பொறுப்பாளர்களில் யாராவது ஒருவர் நோற்று கொள்ள வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் [6]. வல்லாஹுத்தஆலா ஆலம் [6]. எமது நிகழ்ச்சிகளை வாயிலாக தொடர்ச்சியான பயான்களை பார்வையிட டாக்டர் முபாரக் மதனி அபிஷயல் எனும்ய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் [7].