Dr. ஷேக் முபாரக் மதனி

நேர்ச்சை செய்வது எப்படி? நேர்ச்சை செய்யப்பட்ட உணவை நேர்ச்சை செய்தவர் சாப்பிடலாமா?

நேர்ச்சை உணவு சதக்கா நிபந்தனை

← முந்தையஅடுதது →
கேள்வி
நேர்ச்சை செய்வது எப்படி? நேர்ச்சை செய்யப்பட்ட உணவை நேர்ச்சை செய்தவர் சாப்பிடலாமா?
பதில்
பதில்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் ஸலாத்து ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாத நேர்ச்சை செய்வது எப்படி நேர்ச்சை செய்யப்பட்ட உணவுகளை நேர்ச்சை செய்தவர் சாப்பிட லாமா என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [16]. அன்புள்ள சகோதர சகோதரிகளே நேச்சு என்பது ஒரு சிறந்த வணக்கமாகவும் நேச்சியை நிறைவேற்றுவது என்பது மிக முக்கியமான ஒரு கடமையாகவும் நமக்கு ஆக்கப்பட்டிருக்கிறது [16]. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுக்கு வழிப்படுகிற விஷயத்தில் நேச்சை செய்யப்பட்டால் அந்த நேச்சையை நிறைவேற்றுங்கள் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள் [16]. அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே யூபூனபின்நதிர் அவர்கள் நேற்சியை நிறைவேற்றுவார்கள் என்று சிறப்பித்துச் சொல்கிறான் நேர்ச்சை செய்வது என்பதை பொறுத்தவரையில் அது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது முதலாவதாக பொதுவாக ஒருவர் அல்லாஹ்வுக்காக ஒன்றை நேர்ச்சி செய்வது [16]. அல்லாஹ்வுக்காக நான் ஒரு உம்ரா செய்வேன் [16]. அல்லாஹ்வுக்காக நான் மூன்று நோன்புகள் நோட்பேன் [16]. அல்லாஹ்வுக்காக நான் ஒரு ஆடு அறுத்து குர்பானி கொடுப்பேன் [16]. என்று ஒருவர் பொதுவாக நேற்சி செய்வது [16].

இந்த நேச்சை அன்னதுருல் முத்தலக் என்று சொல்வார்கள் இது நேர்ச்சை சிறந்ததாகும் சஹாபாக்கள் இவ்வாறான நேர்ச்சை செய்திருக்கிறார்கள் என்பதை நாம் அவர்களுடைய வாழ்க்கையிலே பார்க்கிறோம் அவ்வாறான நேர்ச்சைகளை நிறைவேற்றுமாறு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்கள் வலியுறுத்தி இருப்பதையும் நாம் பார்க்கலாம் [17]. இன்னும் ஒரு வகையான நேர்ச்சை இருக்கிறது அன்னதுருல் முல்ல பிஷர்த் என்று உலமாக்கள் சொல்வார்கள் அதாவது ஒருவர் கண்டிஷன் போட்டு நேற செய்வது என்னுடைய நோய் குணமானால் நான் ஒரு ஆடு அறுத்து கொடுப்பேன் [17]. என்னுடைய மகள் இந்த பரீட்சையிலே சித்தி யடைந்தால் நான் மூன்று நோன்புகள் நோற்பேன் அல்லது என்னுடைய இந்தப் பிரச்சினை தீர்ந்தால் இவ்வாறு செய்வேன் என்று நேர்ச்சை செய்வதுதான் அன்னதரு அல்முஅல்லக் பிஷர்த் என்று சொல்லப்படுகிறது [17]. இவ்வாறு நேர்ச்சை செய்வது கூடுமா என்று கேட்டால் அதிகமான உலமாக்கள் இவ்வாறு நேர்ச்சி செய்வதை தவிர்த்துக் கொள்வதுதான் சிறந்தது என்று சொல்கிறார்கள் [17]. இவ்வாறு நேர்ச்சை செய்வது ஹராம் என்று சொல்லவில்லை [17]. மாறாக இவ்வாறு நேர்ச்சை செய்வதை தவிர்த்து கொள்வது சிறந்தது என்று சொல்கிறார்கள் [17].

ஏனென்றால் ஒரு ஹதீஸிலே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லும்போது இவ்வாறு ஒருவர் நேர்ச்சை செய்வதன் மூலம் எதையுமே சாதிக்க முடியாது [18]. அதனால் நடப்பது என்ன? என்றால் ஒரு கஞ்சனாக இருக்கிறவனுடைய கஞ்சத்தனம் போக்கப்படும் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் எனவே இந்த அதுஅல்ஷர்த் என்கிற இந்த வகையான நேற்றையை தவிர்த்துக் கொள்வது நல்லது இன்றைக்கு நம்முடைய சமூகத்தில் நிறைய பேர் செய்கிற நேச்சையும் இந்த வகையாகத்தான் இருக்கிறது [18]. இதைவிட நேரடியாக அல்லாஹ்விடத்தில் துவா செய்வது சிறந்ததாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [18]. இருந்தாலும் இவ்வாறு ஒருவர் நேர்ச்சை செய்தால், நான் பாஸ்ஆனால் என்னுடைய நோய் குணமடைந்தால் என்னுடைய மகனுடைய பிரச்சனை தீர்ந்தால் நான் இவ்வாறு செய்வேன் என்று ஒருவர் நேர்ச்சை செய்து அது நிறைவேறினால் கண்டிப்பாக அந்த நேச்சையை அவர் நிறைவேற்ற வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [18]. இந்த நேச்சையை செய்வது எப்படி என்று கேட்கும்போது இதிலும் மிக முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது [18]. அதாவது நிறைய பேர் நேர்ச்சை என்று நினைப்பார்கள் [18].

நினைப்பது நேர்ச்சையாகாது நினைப்பது நேர்ச்சையாகாது இப்ப மனதுக்குள்ள நான் நினைக்கிறேன் என்னுடைய மகளுக்கு இவ்வாறு ஒன்று நடந்துவிட்டால் நான் இவ்வாறு செய்வேன் என்று மனதால் நினைப்பது இது நேர்ச்சை அல்ல நேச்சை என்பது வாயால் சொல்லப்பட வேண்டும் யா அல்லாஹ் என்னுடைய மகள் இந்த குறிப்பிட்ட பரீட்சையில் சித்தி அடைந்தால் நான் உனக்காக இவ்வாறு செய்வேன் என்று ஒருவர் சொல்வதுதான் நேற்றையாகும் நினைப்பது நேற்றையாகாது என்பதையும் நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் [19]. எனவே நினைக்கிற ஒருவர் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது [19]. அடுத்ததாக அன்புள்ள சகோதர சகோதரிகளே நாம் செய்யக்கூடிய அந்த நேர்ச்சை இப்ப உதாரணமாக ஆடறுக்கிற நேர்ச்சை செய்கிறோம் [19]. ஆடறுத்து விட்டால் அந்த ஆட்டு இறைச்சியை நேர்ச்சை செய்தவர் சாப்பிடலாமா? என்கிற ஒரு பொதுவான கேள்வி நாளாந்தம் எழுந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம் [19].

இதை பொறுத்தவரையில் நேச்சை செய்கிறவர் நான் அல்லாஹ்வுக்காக ஒரு ஆடறுத்து அதிலிருந்து நானும் சாப்பிட்டு என்னுடைய குடும்பத்தினருக்கும் சாப்பிட கொடுப்பேன் ஏழைகளுக்கும் கொடுப்பேன் என்று நேர்ச்சை செய்திருந்தால் அவர் அதிலிருந்து சாப்பிடலாம் அவருடைய குடும்பத்தினருக்கும் சாப்பிட கொடுக்கலாம் [20]. அப்படி இல்லாமல் பொதுவாக ஒருவர் நேர்ச்சை செய்கிறார் [20]. என்றால் நான் இந்த விஷயம் நடந்தால் அல்லது பொதுவான நேர்ச்சை நான் அல்லாஹ்வுக்காக ஒரு ஆடறுத்து ஏழைகளுக்கு கொடுப்பேன் என்று நேர்ச்சை செய்கிறார் [20]. இந்த நேரத்தில் அந்த நேர்ச்சையில் இருந்து அவர் சாப்பிட முடியாது அது ஏழைகளுக்குதான் கொடுக்கப்பட வேண்டும் [20]. அதேபோல பொதுவாக நேர்ச்சை செய்கிறார் [20]. இந்த ஆட்டை அறுத்து நானும் சாப்பிடுவேன் [20].

என்னுடைய குடும்பத்தினருக்கும் சாப்பிட கொடுப்பேன் அல்லது ஏழைகளுக்கு கொடுப்பேன் என்று அவர் நேர்ச்சை செய்யாமல் அல்லாஹ்வுக்காக ஒரு ஆடு அறுப்பேன் என்று பொதுப்படையாக அவர் நேர்ச்சை செய்தால் உலமாக்கள் குறிப்பிடுகிறார்கள் அவர் அந்த நேச்சையிலிருந்து சாப்பிட முடியாது அதை அவர் ஏனையோருக்கு கொடுக்க வேண்டும் என்ற அந்த அது ஒரு சதக்கா என்கிற அடிப்படையில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிற தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள் எனவே இந்த ஒழுங்குகளை பேணி நாம் நேற்சியஉடைய விஷயங்களை நிறைவேற்ற அல்லாஹுத்தலா தபீக் செய்வானாக ரப்பில் ஆலமீன் [21].

← முந்தையஅடுதது →