Dr. ஷேக் முபாரக் மதனி

நிஸாபை அடையாத அளவிலான தங்கத்தையும், பணத்தையும் சேர்த்து கணக்கிட்டு ஸகாத் கொடுக்கலாமா? (உதாரணமாக 6 பவுண் தங்கம் மற்றும் 5

ஸகாத் தங்கம் பணம் நிஸாப்

← முந்தையஅடுதது →
கேள்வி
நிஸாபை அடையாத அளவிலான தங்கத்தையும், பணத்தையும் சேர்த்து கணக்கிட்டு ஸகாத் கொடுக்கலாமா? (உதாரணமாக 6 பவுண் தங்கம் மற்றும் 5 பவுண் தங்கத்திற்கு நிகரான பணம் இருப்பின்)
பதில்
பதில்:

அஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸலாத்து ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபாத் அன்புள்ள சகோதர சகோதரிகளே ஒருவர் கேட்கிறார் தன்னிடம் தங்கம் 11 பவுண் கிடையாது [14]. 6 பவுண் தங்கம் இருக்கிறது [14]. அதே நேரத்தில் இன்னும் ஒரு ஐந்து பவுனுக்கு நிகரான காஸ் இருக்கிறது [14]. இந்த இரண்டையும் சேர்த்தால் நிசாப் வரும் அப்படி நிசாப் பார்ப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா என்று கேட்கிறார் [14]. இதை பொறுத்தவரையில் அன்புள்ள சகோதர சகோதரிகளே ஜக்காத் கடமையாகக்கூடிய பொருட்கள் நமக்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன [14]. அந்த பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் நிசாபுகளும் சொல்லப்பட்டிருக்கின்றன [14]. குறிப்பிட்ட அளவு எனவே ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாகத்தான் அதனுடைய நிசாபை நாம் பார்க்க வேண்டும் [14]. இதுதான் பொதுவாக உள்ள சட்டமாகும் [14]. அதே நேரத்தில் பணத்தையும் தங்கத்தையும் பொறுத்தவரையில் பணத்தை ஜக்காத்திற்குரிய பணத்தை வந்து எதைக்கொண்டு நிசாபை மதிப்பீடு செய்வது என்பதிலே உலமாக்கள் மத்தியிலே கருத்து வேறுபாடு இருக்கிறது தங்கத்தை கொண்டு நிசாபை தீர்மானிக்க வேண்டும் என்கிற கருத்தும் இருக்கிறது [14].

வெள்ளியை கொண்டு தீர்மானிக்க வேண்டும் என்கிற கருத்தும் இருக்கிறது [15]. அதனால் இன்று பரவலாக இருக்கக்கூடிய நடைமுறை தங்கத்தை கொண்டுதான் அதனுடைய நிசாப் தீர்மானிக்கப்படுகிறது [15]. அந்த அடிப்படையில் தங்கத்தையும் காசையும் பணத்தையும் சேர்த்து நிசாபை தீர்மானிக்கலாம் என்கிற கருத்தை உலமாக்கள் முன்வைத்திருக்கிறார்கள் [15]. தங்கத்தையும் பணத்தையும் சேர்த்து நிசாபை தீர்மானிக்கலாம் இங்கே கேள்வியில் கேட்கப்பட்ட அடிப்படையிலே ஒருவரிடத்தில் ஒரு ஆறு பவுன் தங்கம் இருக்கிறது ஒரு ஐந்து பவுனுக்கு நிகரான காசு இருக்கிறது என்று சொன்னால் அவர் நிசாபை அடைகிறார் என்பது அர்த்தமாகும் எனவே அவர் ஜகாத் கொடுக்க வேண்டும் வல்லாஹுத்தஆலா ஆலம் [15].

← முந்தையஅடுதது →