Dr. ஷேக் முபாரக் மதனி

பஜ்ருக்குப் பிறகும், அஸருக்குப் பிறகும் தூங்குவது கூடுமா?

பஜ்ர் அஸர் தூக்கம் துஆ

← முந்தையஅடுதது →
கேள்வி
பஜ்ருக்குப் பிறகும், அஸருக்குப் பிறகும் தூங்குவது கூடுமா?
பதில்
பதில்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் ஸலாத்து ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபத பஜ்ருக்கு பிறகும் அசருக்கு பிறகும் தூங்குவது கூடுமா என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [8]. இந்த கேள்வியை பொறுத்தவரையில் அன்புள்ள சகோதர சகோதரிகளே பஜ்ருக்கு பிறகும் அசர் தொழுகை பிறகும் தூங்குவதை தடை செய்து எந்தவிதமான ஆதாரங்களும் வரவில்லை என்பதை முதலிலே நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் [8]. பஜிருக்கு பிறகு உள்ள நேரத்தை பொறுத்தவரையில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த நேரத்தில் அதிகமாக திக்ர் செய்யக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள் [8]. ஸஹாபாக்களும் அதேபோன்று திக்ரு செய்யக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள் [8]. சஹீஹான ஹதீஸ்களிலே நாம் பார்க்க முடிகிறது [8]. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நபித்தோழர்களும் பஜிர் தொழுதுவிட்டு தொழுத இடத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வை திக்ர் செய்வார்கள் [8]. பிறகு சூரியன் உதித்த பிறகு அவர்கள் எழுந்து கொள்வார்கள் தங்களுக்கு மத்தியிலே பேசி செலுத்திக் கொள்வார்கள் என்பதை நாம் பார்க்கிறோம் [8]. அதேபோல யா அல்லாஹ் என்னுடைய சமுதாயத்திற்கு காலை பொழுதில் நீ பரக்கத் செய்வாயாக என்று சொன்னார்கள் [9]. எனவே பஜிருக்கு பிறகுள்ள நேரம் அல்லாஹ்வை திக்ரு செய்வதற்குரிய நேரமாகும் [9]. நல்ல காரியங்களை செய்யக்கூடிய ஒரு பரக்கத்தான நேரமாக அது இருக்கிறது [9].

எனவே சில சலபுகள் தங்களுடைய பிள்ளைகள் பஜ்ருக்கு பிறகு உறங்குவதை அவர்கள் விரும்பாதவர்களாக இருந்தார்கள் [9]. இருந்தாலும் கூட பஜ்ருக்கு பிறகு தூங்குவதனால் அது ஏற்படும் இது ஏற்படும் அந்த கஷ்டம் வரும் முசீபத் வரும் என்றெல்லாம் சொல்வது ஆதாரமற்ற ஒரு செய்தி [9]. தியாகும் எனவே ஒருவர் பஜிருக்கு பிறகு தூங்கத்தான் வேண்டும் என்ற நிலை அவருக்கு ஏற்படுகிறது என்றால் அவர் தூங்குவதில் எந்த குற்றமும் கிடையாது [9]. திக்ர் செய்வாராக இருந்தால் அது சிறந்ததாகும் [9]. அதேபோலதான் அசர் தொழுகைக்கு பிறகுள்ள நேரத்தை பொறுத்தவரையிலும் தூங்க கூடாது என்று எந்தவிதமான தடைகளும் குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ வரவில்லை [9]. மாறாக யார் ஒருவர் அசருக்கு பிறகு தூங்கி அவருடைய புத்தி கட்டு போனால் அவர் தன்னையே நொந்து கொள்ளட்டும் என்கிற ஒரு செய்தி மக்கள் மத்தியிலே பரப்பப்படுகிறது [9]. இது ஆதாரம் இல்லாத பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஒரு செய்தியாகும் எனவே பஜ்ருக்கு பிறகும் அசருக்கு பிறகும் தூங்குவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று அல்ல இருந்தாலும் கூட அந்த இரண்டு நேரங்களும் பஜ்ருக்கு பிறகு உட்கார்ந்து காலை திக்ருகள் செய்ய வேண்டிய நேரம் அசருக்கு பிறகு மாலை திக்ருகள் செய்ய வேண்டிய நேரம் எனவே அந்த நேரங்க பயனுள்ளதாக கழிப்பதே சிறந்ததாகும் வல்லாஹுலாம் [10]. எமது நிகழ்ச்சிகளை வாயிலாக தொடர்ச்சியான பயான்களை பார்வையிட டாக்டர் முபாரக் மதில்ய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் [10].

← முந்தையஅடுதது →