அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபாத் மன்னிப்பு கேட்டும் மன்னிக்காமல் விட்டால் என்னுடைய நிலைமை என்ன? என்கிற ஒரு கேள்வியை ஒரு சகோதரர் கேட்டிருக்கிறார் [19]. அன்புள்ள சகோதர சகோதரிகளே, மனிதர்கள் பலவீனமானவர்களாக படைக்கப்பட்டிருப்பதாக அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே சொல்கிறான் [19]. இந்த பலவீனத்தின் காரணத்தினால் சில நேரங்களில் சில மனிதர்கள் ஏனைய சகோதரர்களுக்கு ஏதாவது அநீதி இழைத்து விடுவதை அல்லது அவர்களுடைய விஷயத்தில் தவறாக நடந்து கொள்வதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது [19]. இந்த சந்தர்ப்பத்தில் ஈமானும் தக்குவாவும் உள்ள ஒரு மனிதன் உடனடியாக தான் செய்த தவறை தான் இழைத்த அநீதியை புரிந்து கொண்டு அநீதி இழைக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பது என்பது இஸ்லாம் வலியுறுத்தக்கூடிய ஒரு பண்பாக இருந்து கொண்டிருக்கிறது [19]. இந்த பண்பு ஒருவரிடம் வருகிறது என்றால் நிச்சயமாக அவருடைய உள்ளத்தில் ஈமான் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் [19].
நாம் நம்முடைய தவறுகளையும் நாம் செய்த அநியாயத்தையும் நியாயப்படுத்திக்கொண்டு நம்மிடம் காணப்படக்கூடிய ஈகோ போன்ற பிரச்சனைகளால் நாம் மன்னிப்பு கேட்க தவறினால் நாளை மறுமையிலே நாம் மிகப்பெரிய கைசேதப்பட வேண்டி வரும் என்பதை அல்குர்ஆனும் ஹதீஸும் நமக்கு சொல்லிக் காட்டுகின்றன [20]. குறிப்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு ஒருவருக்கு ஏசி திட்டி அல்லது அடித்து, அல்லது அவருடைய உடம்பிலே காயம் ஏற்படுத்தி, அல்லது அவருடைய உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி, அல்லது அவருடைய பொருளாதாரத்தை சுரண்டி, இவ்வாறு அநீதி இழைத்த நிலையில் மறுமையிலே அவரிடம் மன்னிப்பு கேட்காமல் போய் நின்றால், அல்லாஹ் ஜல்லஷானஹுத்தஆலா இவருடைய நன்மைகளை எல்லாம் எடுத்து அவருக்கு கொடுத்து, அவருடைய பாவங்களை எல்லாம் இவருக்கு எடுத்துக்கொடுத்து, இவரை நரகத்திற்கு அனுப்புவான் [20]. அநீதி இழைக்கப்பட்டவரை, சொர்க்கத்திற்கு அனுப்புவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் [20]. எனவே மேக்ஸிமம் நம்மால் முடியுமானவரை யாருக்கும் நம்முடைய நாவினாலோ கரத்தினாலோ அல்லது வேறு எந்த வழிகளிலோ அநீதி இழைக்காமல் இருப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் [21]. அதையும் தாண்டி பலவீனர்கள் என்கிற அடிப்படையில் நம்மால் ஏதாவது ஒரு தவறு அநீதி இடம் பெற்றுவிட்டால் உடனடியாக மன்னிப்பு கேட்பதற்கு நாம் பின்வாங்க கூடாது [21].
அப்படி ஒருவர் மன்னிப்பு கேட்டுவிட்டால் அந்த சகோதரர் மன்னிப்பு கேட்பதை ஏற்றுக்கொள்வதும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது மார்க்கத்திலே ஒருவர் மன்னிப்பு கேட்டு வருகிற போது அவரை ரிஜெக்ட் பண்ணி அனுப்புவது என்பது ஒரு மிகப்பெரிய பிழையாகவும் தவறாகவும் காணப்படுகிறது [21]. சில ஹதீஸ்களை பார்க்கும்போது அறிவிப்பாளர் வரிசைகளில் சில விமர்சனங்கள் இருந்தாலும் அந்த ஹதீஸ்களுடைய கருத்துக்களை பார்க்கிற போது ஒருவர் தன்னிடத்தில் வந்து மன்னிப்பு கேட்டு அவருடைய அந்த மன்னிப்பு கோரலை ஏற்றுக் கொள்ளாமல் ஒருவர் இருப்பாராக இருந்தால் நாளை மறுமையில் அவர் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகர மாட்டார் என்று எச்சரிக்கக்கூடிய அளவுக்கு செய்திகள் வந்திருப்பதை நாம் பார்க்கிறோம் [21]. எனவே அன்புள்ள சகோதர சகோதரிகளே அநீதி இழைத்தவர் மன்னிப்பு கேட்க வேண்டும் இழைக்கப்பட்டவர் அவர் பெருந்தன்மையோடு தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வருகிற நேரத்தில் மன்னிக்க வேண்டும் [22].
அல்லாஹ் ஜல்லஷானஹுத்தஆலா இந்த விஷயத்தில் நமக்கு அவனை கபூர் கபார் தவ்வாப் என்கிற பெயர்களால் அடையாளப்படு நமக்கு மிகப்பெரிய ஒரு பாடத்தை கற்றுத் தருகிறான் அல்லாஹுத்தஆலா எல்லா நிமத்துகளையும் நமக்கு தருகிறான் [22]. இந்த உலகத்தில் எல்லா அருட்கொடைகளையும் தருகிறான் தந்துவிட்டு இவ்வாறு இவ்வாறு நீங்கள் நடக்க வேண்டும் என்று கட்டளைகளையும் சட்டங்களையும் அல்லாஹுத்தஆலா நமக்கு தருகிறான் அதை நாம் மீறி நடப்பது என்பது நாம் செய்யக்கூடிய அநியாயமாகும் [22]. அப்படி அநியாயம் இழைக்கிறவர்களை பார்த்து அல்லாஹ் ஜல்லஷனஹுத்தஆலா எப்படி அழைப்பு விடுக்கிறான் என்றால் குயாபாதில்லர பாவங்களை அளவுக்கு அதிகமாக செய்து தங்களுக்கு தாங்களை அணைதி இழைத்துக் கொண்ட என்னுடைய அடியார்களே என்னுடைய ரஹ்மத்தில் நீங்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று சொல்கிறான் அல்லாஹுத்தஆலா எவ்வளவு பாவங்களை அவனுடைய ஹக்கில் ஒரு அடியான் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்கிறான் என்கிற விஷயத்தை அவன் சொல்வதிலிருந்து அந்த நிலைமை அடியார்களிடமும் வரவேண்டும் நம்முடைய பிள்ளைகளாக இருக்கலாம் உறவினர்களாக இருக்கலாம் நண்பர்கள இருக்கலாம் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம் யாராக இருந்தாலும் நம்மிடத்தில் வந்து மன்னிப்பு கேட்கும் போது அதை மன்னிக்கக்கூடிய பக்குவம் நம்மிடத்திலே வர வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [23]. எனவே மன்னிப்பு கேட்கிற சகோதரர் அவர் தன்னுடைய கடமையை அவர் சரியாக செய்கிறார் [23]. திரும்ப் திரும்ப போய் மன்னிப்பு கேளுங்கள் [23]. அவர்கள் மன்னிக்காவிட்டாலும் இன்ஷா அல்லாஹ் உங்களுடைய நிலையை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான் [23]. நிச்சயமாக அல்லாஹுத்தஆலா ம உங்களுக்கு அநீதி இழைக்க மாட்டான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் வல்லாஹுலாம் [24].