Dr. ஷேக் முபாரக் மதனி

நாய் நக்கிய பாத்திரத்தை அல்லது நாயின் நஜீஸை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்?

நாய் தூய்மை பாத்திரம் மண்

← முந்தையஅடுதது →
கேள்வி
நாய் நக்கிய பாத்திரத்தை அல்லது நாயின் நஜீஸை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும்?
பதில்
பதில்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபத நாயினுடைய நஜீஸை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [25]. அன்புள்ள சகோதர சகோதரிகளே முதலிலே நாய் முழுக்க நஜீஸா தா அல்லது நாய் நக்கினால் மாத்திரம்தான் நஜீஸ் உண்டாகுமா என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [25]. இதை பொறுத்தவரையில் பெரும்பாலான உலமாக்கள் நாய் முழுக்க நஜீஸ் என்பதை வலியுறுத்துகிறார்கள் [25]. நாயினுடைய உடலும் நஜீஸ்தான் நாய் நக்கினாலும் நஜீஸ்தான் என்கிற கருத்தை பெரும்பாலான உலமாக்கள் முன்வைக்கிறார்கள் [25]. இதிலே ஹனபி மத்ஹபை சேர்ந்த மாலிக் மத்ஹபை சேர்ந்த உலமாக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்கின்றன [25]. இருந்தாலும் நாய் பொதுவாக நஜீஸ் என்பதுதான் சரியான கருத்து என்பதை ஹதீஸ்களின் நிழலிலே நாம் புரிந்து கொள்ள கூடியதாக இருக்கிறது [25].

இரண்டாவதாக நாயினுடைய நஜீஸை எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை பொறுத்தவரையில் பொதுவாக நம்முடைய மக்களிடத்திலே கிராமப்புறங்களிலே ஒரு நம்பிக்கை இருக்கு [25]. து நாய் நக்கிய பாத்திரங்களை சலவாத்து சொல்லி கழுவ வேண்டும் என்கிற ஒரு செய்தி காணப்படுகிறது [25]. ஆனால் இது ஒரு பிதத்தான மக்களால் புணைந்து உருவாக்கப்பட்ட ஒரு கற்பனையை அல்லாமல் இவ்வாறு சலவாத்து சொல்லி கழுவ வேண்டும் என்கிற செய்திகள் ஹதீஸ்களில் எங்குமே சொல்லப்படவில்லை என்பதை நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் [26]. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிக் தெளிவாக சஹீ முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூல்களிலே வரக்கூடிய ஹதீஸிலே, ஒரு பாத்திரத்தில் நாய் நக்கி விட்டால், அந்த பாத்திரத்தை ஏழு முறை கழுவ வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்தி இருக்கிறார்கள் [26]. ஏழு முறையில் ஒரு முறை மண் சேர்க்க வேண்டும் [26]. ஹதீஸ்களிலே முதல் தடவை மண்ணை சேர்த்து கொள்ளுங்கள் என்றும் வருகிறது [26]. எனவே முதலில் மண்ணை சேர்த்து கழுவ வேண்டும் இது முதலாவது தடவை கழுவுகிற போது மண்ணை சேர்த்து கழுவ வேண்டும் மற்ற ஆறு தடவைகளும் தண்ணீரால் கழுவினால் போதுமானது [26].

சில உலமாக்கள் இப்ப முதல் தடவை மண் சேர்க்க தவறினால் அல்லது ஒருவர் வேண்டும் என்று முதலாவது தடவை மண்ணை சேர்க்காமல் விட்டாலும் இரண்டாவது அல்லது மூன்றாவது ஏழு தடவைக்குள் ஏதாவது ஒரு தடவை மண்ணை சேர்த்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள் எனவே மண்ணை சேர்த்து ஏழு முறை கழுவுவது என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்கள் நாய் நக்கினால் நக்கிய அந்த பாத்திரத்தை வதற்கு சொல்லி் தந்த சட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [27]. ஏனைய நிலைகளை பொறுத்தவரையில் நாய் நம்முடைய ஒரு ஆடையிலே படுத்துவிட்டது அல்லது சிறுநீர் கழித்து விட்டது இவ்வாறு செய்தால் அந்த ஆடையை அல்லது அந்த பாத்திரத்தை ஒழுங்காக கழுவி கொண்டால் போதுமானது எத்தனை தடவை என்கிற சட்டம் அதற்கு பொருந்தாது என்பதுதான் பெரும்பாலான உலமாக்களினுடைய நிலைப்பாடாகும் [27]. எனவே நக்கினால் ஏழு முறை கழுவ வேண்டும் [27]. ஏனைய பகுதிகளால் ஏற்படக்கூடிய நஜீஸை கழுவி சுத்தம் செய்து கொண்டால் போதுமானது வல்லாஹுத்தஆலா ஆலம் [27].

← முந்தையஅடுதது →