Dr. ஷேக் முபாரக் மதனி

நாட்களில் நல்ல நாள் கெட்ட நாள் என்று இருக்கிறதா?

நல்ல நாள் கெட்ட நாள் சகுனம் காலம்

← முந்தையஅடுதது →
கேள்வி
நாட்களில் நல்ல நாள் கெட்ட நாள் என்று இருக்கிறதா?
பதில்
பதில்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ அம்மாப நாட்களிலே நல்ல நாள் கெட்ட நாள் என்று இருக்கிறதா என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [16]. பொதுவாக நாட்களை படைத்தவன் அல்லாஹ்வாக இருக்கிறான் அந்த நாட்களை வனும் அவனே எனவேதான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்கள் அல்லாஹுத்தஆலா கூறியதாக ஒரு ஹதீஸில் குதசியிலே சொல்கிறார்கள் லதசுர் காலத்தை ஏசாதீர்கள் திட்டாதீர்கள் நானே காலமாக இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் [16]. இப்ப உண்மையிலேயே இந்த ஹதீஸினுடைய அர்த்தம் காலத்தை படைத்தவனாகவும் அந்த காலத்தை இயக்குபவனாகவும் அதை ஒழுங்குபடுத்துகிறவனாகவும் அல்லாஹ்வே இருக்கிறான் என்பதாகும் [16]. எனவே அல்லாஹுத்தஆலா படைத்திருக்கிற இந்த காலத்தை யாரும் திட்டுவதோ குறை காண்பதோ கூடாது [16].

இதிலே நல்ல நாள் கெட்ட நாள் என்ற ஒரு நிலை யாரால் உருவாக்கப்பட்டது என்று கேட்டால் சகுணம் பார்க்கிறவர்களால் உருவாக்கப்பட்டதாகும் [16]. இஸ்லாத்தில் சகுனம் பார்ப்பது என்பது இணைவைத்தலாக இஸ்லாம் தடை செய்த ஒரு பாவமாக இருந்து கொண்டிருக்கிறது [16]. சகுணம் இது நல்ல நாள் இது கெட்ட நாள் என்று நாட்களை பிரித்து சகுணம் பார்க்கிற நிலை முஸ்லிம்களுடைய பாரம்பரியத்தில் உள்ளது அல்ல மார்க்கம் அனுமதித்ததும் கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [17]. அதே நேரத்தில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில நாட்களை சிறப்பித்து சொல்லி இருக்கிறார்கள் [17].ப்ப அந்த நாட்களுக்கு சிறப்பு இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது [17]. உதாரணமாக வெள்ளிக்கிழமை நாட்களிலேயே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லுகிறார்கள் வெள்ளிக்கிழமை ஒரு சிறப்பு மிக்க நாளாக இருக்கிறது [17]. அதேபோல சில நேரங்களையும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் [17]. உதாரணமாக காலை பொழுதை ரசூலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடையாளப்படுத்தி அதிலே பரக்கத் செய்யுமாறு அல்லது அல்லாஹ் பரக்கத் செய்திருக்கிறான் என்று சொல்கிறார்கள் [17]. பூரிக்கி என்னுடைய சமுதாயத்தின் காலை வேளையிலே அல்லாஹ் பரக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறான் என்று சொல்கிறார்கள் [17].

எனவே நாம் பொதுவாக காலங்களை படைத்தவன் அல்லாஹ் என்பதையும் காலங்களை இயக்குகிறவன் அல்லாஹ் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் [18]. காலத்தில் கெட்ட காலம் என்ற ஒன்று கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [18]. சில நாட்களையும் சில நேரங்களையும் அல்லாஹ்வுடைய தூதர் சிறந்தது என்று அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் என்பதையும் புரிய வேண்டும் [18]. ஆனால் நாம் இந்த காரியத்தை செய்கிற போதும் நமக்கு எந்த நேரம் எந்த நாள் வசதியாக இருக்கிறதோ அந்த நாளில் அந்த நேரத்தில் அதை செய்வதே சிறந்த தாகும் வல்லாஹுத்தஆலா ஆலம் [18].

← முந்தையஅடுதது →