அல்ஹம்துலில்லாஹ் ஸலாத்து ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபாத் நகையை அடமானமாக வைத்து கடன் பெறுவதை பொறுத்தவரையில் மார்க்கத்தில் எந்த தடையும் கிடையாது [15]. நம்மிடம் இருக்கக்கூடிய நகையை அடமானமாக வைத்து நாம் கடன் பெறலாம் நகையை அடமானமாக வைத்திருக்கக்கூடிய இடத்தில் நம்முடைய நகையை பாதுகாப்பதற்காக என்று ஒரு தொகை பணம் அவர்கள் கேட்கிறார்கள் என்றால் அதுவும் கூடும் என்பது இஸ்லாமிய அறிஞர்களுடைய தீர்ப்பாக இருக்கிறது [15]. ஏனென்றால் நம்முடைய நம ரஹ்னாக அடமானமாக அங்கே வைக்கக்கூடிய அந்த நகையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அதை எடுத்தவருக்கு இருக்கிறது [15]. எனவே அவர் நான் இதை பாதுகாப்பதற்கு நீங்கள் இவ்வளவு தர வேண்டும் என்று கேட்டால் அது கூடுமானதாகும் [15]. ஆனால் ஒரு நியாயம் இல்லாமல் நகையை அடமானமாக வைத்து நம்ம கடன் பெற்ற பிறகு கடனை திருப்பி கொடுக்கிற நேரத்தில் நியாயம் இல்லாத முறையில் அதிகமாக அவர்கள் மேலதிகமாக கேட்பார்களாக இருந்தால் அந்த தொகை வட்டியாகவே கருதப்படும் [15]. இஸ்லாமிய சட்டத்துறையிலே ஒரு மிக முக்கியமான விதி இருக்கிறது [15].
அதுதான் குள்ு கர்ன் ஜர்மன்பா அதாவது கடன் தந்துவிட்டு அந்த கடனுக்கு ஒருவர் லாபமோ பயனோ எதிர்பார்ப்பாராக இருந்தால் அது வட்டியாகும் [16]. அந்த அடிப்படையில் நமக்கு கடன் தரக்கூடியவர்கள் அது அடமானமாக ஒரு பொருளை பெற்று கடனாக தந்தாலும் சரி அல்லது நம்பிக்கை அடிப்படையில் எந்த அடமானங்களும் உத்தரவாதமும் இல்லாமல் கடனை தந்தாலும் சரி நாம் எவ்வளவு அவரிடமிருந்து வாங்கினோமோ அதைத்தான் அவர் திரும்ப பெற வேண்டும் [16]. அதற்கு அதிகமாக அவர் நம்மிடம் கேட்பாராக இருந்தால் அது வட்டியாக அமையும் என்பதை நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் [16]. எனவே அல்லாஹுத்தஆலா பயங்கரமான பாவமாகிய வட்டியில் இருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக [16].