Dr. ஷேக் முபாரக் மதனி

நகம் வெட்டிய பின் அதனை புதைக்க வேண்டுமா?

நகம் வெட்டுதல் புதைத்தல் சுன்னத்

← முந்தையஅடுதது →
கேள்வி
நகம் வெட்டிய பின் அதனை புதைக்க வேண்டுமா?
பதில்
பதில்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸலாத்து வஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபாத் நகத்தை வெட்டி புதைக்க வேண்டுமா என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [11]. அன்புள்ள சகோதர சகோதரிகளே நகம் வெட்டுவது என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாக காணப்படுகிறது [11]. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஐந்து விஷயங்களை இயற்கையான சுன்னா என்று குறிப்பிடுகிறார்கள் [11]. அந்த ஐந்து விஷயங்களிலே ஒன்றுதான் கல்முல் அவாபிர் நகம் வெட்டுவது என்பதாகும் [11]. நகம் வெட்டுவதை பொறுத்தவரையில் இது சுன்னாவாக இருக்கிற அதே நேரத்தில் மனிதனுடைய சுத்தத்தை பேணக்கூடிய தாகவும் காணப்படுகிறது [11]. நகங்களுக்குள் அழுக்குகள் நுழைந்து கொள்கிற போது அதன் மூலம் கிருமிகள் பரவுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன [11]. அவற்றை வெட்டி சுத்தம் செய்வதன் மூலம் நம்முடைய உடலை நாம் சுத்தமாக வைத்திருப்பதற்கு அது வழிவகுக்கிறது [11]. கால் நகங்களாக இருந்தாலும் சரி, கை விரல்களில் உள்ள நகங்களாக இருந்தாலும் சரி, இந்த நகங்களை வெட்டிக்கொள்ள வேண்டும் [11]. இந்த நகங்களை மேக்ஸிமம் 40 நாட்கள் வரை வெட்டாமல் இருப்பதற்கு அனுமதி இருக்கிறது [11].

முஸ்லிமிலே பதிவு செய்யப்படக்கூடிய ஒரு ஹதீஸில் 40 நாட்கள் வரை ஒருவர் நகம் வெட்டி கொள்ளலாம் என்ற கருத்திலே ஒரு ஹதீஸ் இடம்பெறுவதை நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் [12]. இருந்தாலும் கூட நகம் ஒரு குறிப்பிட்ட அளவை அடைகிற போது அதை வெட்டி சுத்தம் செய்து கொள்வது என்பது மிக முக்கியமான ஒன்றாகும் [12]. இதை எப்போது வெட்டி சுத்தம் செய்ய வேண்டும் என்பதிலே பல்வேறு கருத்துக்கள் இமாம்கள் மத்தியிலே காணப்படுகிறது [12]. சில இமாம்கள் வெள்ளிக்கிழமைகள் வெட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள் [12]. இன்னும் சிலர் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு வெட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள் [12]. இன்னும் சிலர் வியாழக்கிழமை வெட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள் [12]. இதற்கு சில ஹதீஸ்களையும் அசர்களையும் ஆதாரமாக சொல்கிறார்கள் [12]. ஆனால் எதுவுமே ஆதாரப்பூர்வமானவை அல்ல [12]. எல்லாமே பலவீனமானவை என்பதை நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் [12]. எனவே ஒருவர் அவருடைய நகம் வளர்வதை அவரால் உணர முடியும் [12]. வளர்ந்து அந்த நகம் அழுக்காக இருப்பதை அவரால் பார்க்க முடியும் [12].

எனவே அப்போது அவர் வெட்டி கொள்வது சிறந்தது என்பதை நாம் புரிய வேண்டும் அதே நேரத்திலே இன்றைக்கு நகத்திலே சிலர் வந்து சில ஜாஹிலியத்தான நடைமுறைகளை பின்பற்றுவதையும் பார்க்க முடிகிறது [13]. எல்லா நகங்களையும் வெட்டிக்கொண்டு ஒரு நகத்தை வளர்ப்பது அல்லது சில நேரங்களில் பெண்கள் கூட அவர்களுடைய சில நகங்களை மிக நீளமாக வளர்த்துக் கொள்வது என்பது சுன்னாவுக்கு மாற்றமானது இது பிழையான நடைமுறை இது பிற மத அல்லது ஏனைய கல்ச்சர்களை பின்பற்றுவதாக இருக்குமாக இருந்தால் அது பாவமானதாக அமையும் என்பதை நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் [13]. இந்த நகங்களை வெட்டினால் அதை புதைக்க வேண்டுமா என்பதை பொறுத்தவரையிலும் அறிஞர்கள் மத்தியிலே சில கருத்துக்கள் காணப்படுகின்றன [13].

ஆனால் அவர்கள் முன்வைக்கக்கூடிய எந்த செய்திகளும் ஆதாரபூர்வமானவை இல்லை என்பதனால் நகத்தை புதைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது நகத்தை புதைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது மார்க்க அடிப்படையில் எந்த ஹதீஸும் அதை புதைப்பது கடமை என்று நமக்கு சொல்லவில்லை இருந்தாலும் கூட நகம் அங்குமிங்கும் கிடக்கிற போது అది கால்களிலே படுவதற்கு குத்துவதற்கு அசிங்கமாக தோற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது எனவே அதை புதைத்து விடுவதோ அல்லது அதை டஸ்பின்னில் போட்டு விடுவதோதான் சிறந்தது சிலர் வந்து வீட்டில் அங்குமிங்கும் வெட்டி போட்டுவிடுவா ர்கள் அது ஒரு சுத்தத்தை அல்லது ஒழுங்கை பாதிக்கக்கூடிய ஒரு விஷயமாக நாம் பார்க்க வேண்டுமே தவிர மார்க்கத்தில் நகத்தை புதைக்க வேண்டும் என்பதற்கு தெளிவான சஹீஹான எந்த ஆதாரங்களும் கிடையாது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் வல்லாஹுத்தஆலா ஆலம் [14].

← முந்தையஅடுதது →