அஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபாத் தொழும்போது சிந்தனை சிதரடிக்கப்பட்டால் தொழுகை பாத்தில் ஆகுமா என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [21]. அன்புள்ள சகோதர சகோதரிகளே தொழுகையிலே ஈடுபடும்போது இறையச்சத்தோடு பயபக்தியோடு தொழுகையிலே ஈடுபட வேண்டும் என்பது இஸ்லாம் வலியுறுத்தக்கூடிய ஒன்றாகும் அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே கதல் முமினன் அல்லதனும் என்று சொல்கிறான் மூமின்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள் அவர்கள் தங்களுடைய தொழுகையிலே ுஷுோடு இருப்பார்கள் அதாவது இறையச்சத்தோடு பயபக்தியோடு ஈடுபடுவார்கள் என்று அல்லாஹுத்தஆலா சொல்கிறான் அதேபோல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தொழுகையில் இருக்கும்போது ரூஹானியத்தோடு பயபக்தியோடு அந்த தொழுகையில் ஈடுபட வேண்டும் என்பதை பல கோணங்களிலே நமக்கு வலியுறுத்துகிறார்கள் [21]. இருந்தாலும் கூட தொழுகையிலே ஈடுபடுகிற ஒரு முஸ்லிம் 100 வீதம் இறைபக்தியோடு அல்லாஹ்வுடைய அச்சத்தோடு தொழுவது என்பது சிரமமான ஒரு காரியமாகும் [21].
சில நேரங்களில் சில சஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ிடம் வந்து தங்களுடைய தொழுகையில் முழு ஈடுபாட்டோடும் தொழ முடியாது என்று சொன்னபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் ஹின்சப் என்ற ஒரு சைத்தான் இருக்கிறான் [22]. அவன் தொழுகையிலே கவனத்தை கலைப்பதற்கும் அதிலே ஈடுபாடு இல்லாமல் ஆக்குவதற்குமான வேலைகளை செய்யக்கூடியவன் என்று சொன்னார்கள் [22]. தொழுகையை பொறுத்தவரையில் இறையச்சத்தோடும் பயபக்தியோடும் தொழ வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டிருந்தாலும் வேறு சிந்தனைகள் தொழுகையில் வருவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும் அவ்வாறு தேவையில்லாத சிந்தனைகள் வரும்போது இடது பக்கத்திலே துப்பி மூன்று தடவை துப்பி சைத்தானிடமிருந்து பாதுகாப்பு தேட வேண்டும் என்ற வழிகாட்டலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு தந்திருக்கிறார்கள் [22]. சில நேரங்களில் அளவுக்கு மீறிய சிந்தனை சிதரல் ஏற்படும் [22]. இப்ப தொழுகையிலே ஒரு 10 நிமிடங்கள் நாம் ஈடுபடுகிறோம் என்றால், எட்டு நிமிடங்கள் வேறு சிந்தனைகளோடு நாம் தொழக்கூடிய சூழ்நிலைகளும் சில நேரங்களிலே உருவாகும் [22]. இவ்வாறு ஏற்பட்டால் தொழுகை பாத்தில் ஆகுமா? [22]
தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாமல் போய்விடுமா என்று கேட்டால் இது தொடர்பாக பேசக்கூடிய உலமாக்கள் அவ்வாறு அதிகமான சிந்தனை சிதறல் ஏற்படுவதனால் தொழுகை பாத்திலாக மாட்டாது [23]. ஒருவர் அல்லாஹ்வுக்காக என்ற நியத்தோடு தொழுது கொண்டி க்கிற நேரத்தில் அவருடைய சிந்தனை சிதரும் போது அதனால் தொழுகை பாத்திலாக மாட்டாது ஆனால் தொழுகையின் பூரணத்துவத்தை அது பாதிக்கும் என்று கூறுகிறார்கள் வல்லாஹுத்தஆலா ஆலம் [23].