அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸலாத்து வஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபாத் தொழுவதற்கு கிப்லாவை முன்னோக்குவது கட்டாயமா என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [4]. அன்புள்ள சகோதர சகோதரிகளே திப்லாவை முன்னோக்குவது தொடர்பாக வந்திருக்கக்கூடிய அல்குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்களை ஆதாரமாக வைத்து கண்ணியத்திற்குரிய இமாம்கள் தொழுகையிலே ஒரு முஸ்லிம் கிப்லாவை முன்னோக்குவது ஷர்த் நிபந்தனை என்று கூறுகிறார்கள் [4]. அந்த வகையிலே ஒவ்வொரு தொழுகையிலும் கிப்லாவை முன்னோக்குவது நமக்கு அவசியமாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [4]. அது பர்து தொழுகையாக இருந்தாலும் சரி சுன்னத்தான தொழுகையாக இருந்தாலும் சரி கிப்லாவை முன்னோக்க வேண்டும் [4]. கிப்லா என்று சொல்கிற போது காபத்துல்லாஹவை நேரடியாக முன்னோக்க வேண்டுமா? அல்லது காபத்துல்லாஹ் அமைந்திருக்கிற திசையை முன்னோக்க னால் போதுமா என்பதிலே சில கருத்து வேறுபாடுகள் அறிஞர்கள் மத்தியில் இருந்தாலும் காபத்துல்லாஹ் அமைந்திருக்கிற திசையை நோக்கி தொழுதால் போதுமானது என்கிற கருத்தே வலுவானதாக காணப்படுகிறது [4].
அந்த அடிப்படையில் கபா அமைந்திருக்கிற திசையாகிய நம்முடைய கிப்லாவைஃர் தொழுகைகளிலும் சுன்னத்தான தொழுகைகளிலும் நாம் முன்னோக்கி தொழுவது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [5]. அந்த வகையில் ஒரு மனிதர் கிப்லாவை முன்னோக்க தவறினால் தன்னுடைய தொழுகையில் அறியாமையினாலோ அல்லது மறதியினாலோ கிப்லா திசையை முன்னோக்காமல் வேறு ஒரு திசையை முன்னோக்கி தொழுதுவிட்டு பிறகு அவருக்கு கிப்லா திசை அல்லாத திசையை நோக்கி நான் தொழுதுவிட்டேன் என்பது தெரிய வந்தால் அந்த தொழுகையை என்ன செய்வது என் என்பதை பொறுத்தவரையில் மிகப்பெரும்பாலான உலமாக்களுடைய கருத்துப்படி அந்த தொழுகையை அவர் மீட்டி திரும்ப தொழ வேண்டும் கிப்லாவை முன்னோக்கி அவர் அந்த தொழுகையை தொழ வேண்டும் என்பதை நாம் அவதானிக்கலாம் [5]. இந்த கருத்துதான் சரியான கருத்தும் கூட [5]. எனவே கிப்லாவை தொழுகைகளிலே நாம் முன்னோக்க வேண்டும் [5]. ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களில் கிப்லாவை முன்னோக்குவதில் நமக்கு விதிவிலக்கு அளிக்கப்படு. ஒன்று சலாத்துல் ஹவப் என்று சொல்லக்கூடிய ஒரு அச்சமான பயமான ஒரு யுத்த சூழ்நிலையில் தொழுகிற போது நாம் கிப்லாவை கட்டாயமாக முன்னோக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது [5].
கிப்லாவை முன்னோக்க தொழ முன்னோக்கி தொழ முடியுமாக இருந்தால் அல்ஹம்துலில்லாஹ் கிப்லாவை முன்னோக்கி தொழ வேண்டும் [6]. அந்த வாய்ப்பு கிடைக்காத போது வேறு திசைகளை நோக்கி நாம் தொழுது கொள்வதில் குற்றமில்லை [6]. அதே போல ஒருவர் பிரயாணத்தில் இருக்கிறார் என்று சொன்னால் அந்த பிரயாணத்தில் அவர் வாகனத்தில் இருக்கிற போது சுன்னத்தான தொழுகைகளை தொழ விரும்புகிறார் [6]. அவர் வாகனத்தில் இருக்கிற நிலையில் பிரயாணத்தில் சுன்னத்தான தொழுகைகளை தொழுகிற போது கிப்லாவை முன்னோக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது [6]. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிப்லாவை முன்னோக்காமல் வாகனத்திலே சுன்னத் தொழுகையை தொழுதி இருக்கிறார்கள் என்பதை நாம் ஹதீஸ்களிலே பார்க்க முடிகிறது [6]. அதே நேரத்திலே அன்புள்ள சகோதர சகோதரிகளே சில நேரங்களில் நம்முடைய வக்துகள் தவறிவிடும் என்று கருதுகிற சூழ்நிலைகள் நமக்கு உண்டாகும் [6].
உதாரணமாக விமானத்தில் பயணிக்கிற ஒரு பிரயாணி அல்லது ட்ரெயினிலே பயணிக்கக்கூடிய ஒரு பிரயாணியை பொறுத்தவரையில் அந்த நேரங்களில் அவரால் பஜிரு தொழுகை உரிய நேரத்தில் நிறைவேற்ற முடியாமல் போய்விடும் என்று பயப்படுகிற போது அவர் அந்த வாகனங்களில் இருந்த நிலையில் ஏனென்றால் இறங்குவதற்கும் சந்தர்ப்பம் இல்லை நிர்பந்தமான சூழல் என்ற அடிப்படையில் அவர் அந்த வாகனத்தில் இருந்தபடி குறிப்பிட்ட தொழுகையை நிறைவேற்றி கொள்ளலாம் அப்படி நிறைவேற்றுகிற போது கிப்லாவை முன்னோக்க முயற்சிக்க வேண்டும் அப்படி முன்னோக்க முடியாமல் போனால் அதில் குற்றமில்லை ஏனென்றால் இது ஒரு நிப்பந்தமான சூழ்நிலையாகும் அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனல சொல்லும்போது த்தல்லாஹ மஸ்தம் உங்களுடைய சக்திக்கு உட்பட்டவரை அல்லாஹ்வை தக்குவா செய்யுங்கள் என்று சொல்கிறான் லயுல்லா ஒரு ஆத்மாவை அதன் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை என்று சொல்கிறான் இந்த பொதுவான ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறான சந்தர்ப்பங்கள் விதிவிலக்கு பெறும் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் வல்லாஹுத்தஆலா ஆலம் [7].