அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லா அம்மாபத தொழுகையில் ஒரு விஷயத்தை மறந்துவிட்டால் அல்லது மேலதிகமாக செய்துவிட்டால் அந்த தொழுகையை மீட்டி தொழ வேண்டுமா என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [17]. அன்புள்ள சகோதர சகோதரிகளே இந்த கேள்வியை பொறுத்தவரையில் ஒரு விரிவான பல விஷயங்களை உள்ளடக்கிய ஒரு கேள்வியாக இருந்தாலும் கேட்கப்பட்ட விஷயத்திற்கு மாத்திரம் சுருக்கமான பதிலை இந்த சந்தர்ப்பத்தில் பதிவிடலாம் என்று எண்ணுகின்றோம் [17]. ஒருவருக்கு தொழுகையிலே மறது ஏற்படுவது என்பது இயற்கையான ஒன்றாகும் [17]. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் தொழுகையிலே மறதி ஏற்பட்டிருக்கிறது [17]. ஓதுகிற போது கிராத்திலே மறதி வந்திருக்கிறது [17]. அதேபோல ரக்காத்துக்களுடைய எண்ணிக்கையிலே மறதி ஏற்பட்டிருக்கிறது [17]. ஒருவருக்கு அவ்வாறு மறதி ஏற்பட்டு அவர் ஒன்றை குறைவாக செய்தால், அல்லது கூடுதலாக செய்துவிட்டால், அதற்குரிய வழிமுறையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நமக்கு காட்டி தந்திருக்கிறார்கள் [17]. அந்த அடிப்படையிலே, ஒருவர் மறந்து ஒரு ரக்காத்தை விடுகிறார் [17].
நான்கு ரக்காத் தொழுகையை மூன்றோடு அவர் ஸலாம் கொடுத்துக் கொள்கிறார் என்றால் ஸலாம் கொடுக்கும் போது அவருக்கு நினைவுக்கு வந்தால் அல்லது அவர் இமாமாக இருக்கிற போது மமூம்கள் அதை சுட்டி காட்டினால் அதாவது சுபஹானல்லாஹ் என்று சொல்லி சுட்டி காட்டுவார்கள் மமூம்கள் அப்படி சுட்டி காட்டினால் உடனடியாக அவர் நான்காவது ரக்அத்துக்கு எழுந்து அந்த ரக்காத்தை பூரணப்படுத்த வேண்டும் [18]. பூரணப்படுத்திவிட்டு ஸலாம் கொடுப்பதற்கு முன்னால் அவர் அதாவது அத்தஹியாத் ஓதி ஸலாம் கொடுப்பதற்கு முதல் இரண்டு சஜிதாக்கள் செய்ய வேண்டும் அல்லாஹு அக்பர் என்று சுஜூதுக்கு போய் சுஜூதிலே ஓதக்கூடிய சுபஹானரப்பியல்ஆலா என்பதை மூன்று தடவைகள் குறைந்தபட்சம் ஓதிவிட்டு இப்படி இரண்டு சஜிதாக்கள் செய்ய வேண்டும் இதை சுஜூதுசஹ அல்லது சஜிதத்துசஹ என்று சொல்வார்கள் இந்த தா செய்துவிட்டு ஸலாம் கொடுக்க வேண்டும் அவருடைய தொழுகை பூரணமாகிவிடும் [18].
அதேபோலதான் நான்காவது ரக்காத்திலே அத்தஹியாத்தில் இருக்க வேண்டியவர் ஐந்தாவது ரக்காத்துக்கு எழுந்திருக்கிறார் என்றால் எழும்பும் போது நினைவுக்கு வந்தாலும் சரி எழுந்த பிறகு நினைவுக்கு வந்தாலும் சரி அவர் அத்தஹியாத்திற்கு மீண்டும் வந்துவிட வேண்டும் [19]. அது தனியாக தொழுகிறவராக இருந்தாலும் சரி இமாமாக நின்று தொழுகை நடத்துகிறவராக இருந்தாலும் சரி அவருக்கு அவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்படுவது எதார்த்தமானது [19]. எனவே அப்படி அவர் ஐந்தாவது ரக்காத்துக்கு எழும்புகிற போது மாமூம்கள் சுட்டிக்காட்டுவார்கள் [19]. அல்லது அவர் உணர்ந்து கொள்வார் இப்படி உணர்ந்து கொள்ளும்போது ஐந்தாவது ரக்காத்திலே நிற்காமல் உடனடியாக அவர் அத்தஹியாத்திற்கு வந்து அத்தஹியாத்தை ஓதி முடித்துவிட்டு அவர் ஸலாம் கொடுப்பதற்கு முன்னால் இரண்டு சஜிதாக்கள் செய்து கொள்ள வேண்டும் [19]. இதன் மூலம் அவருடைய தொழுகை பூரண அடைந்துவிடும் அந்த தொழுகையிலே எந்த குறைபாடுகளும் வரமாட்டாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [19].
இவ்வாறு செய்த ஒருவர் சஜிதா சகவம் செய்துவிட்டு மீண்டும் அந்த தொழுகையை திருப்பி தொழ வேண்டுமா என்று கேட்டால் அப்படி தொழுவதற்கு எந்தவிதமான வழிகாட்டல்களும் இஸ்லாத்திலே கிடையாது [20]. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு நமக்கு காட்டி தரவில்லை [20]. அவ்வாறு செய்வது பிழையாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [20]. எனவே தொழுகையிலே மறதியால் ஒன்றை குறைத்தால் அல்லது மேலதிகமாக ஒன்றை செய்தால் அவர் ஸலாம் கொடுப்பதற்கு முன்னால் சஜிதா சஹு அல்லது சுஜூது சஹு என்று சொல்லக்கூடிய மறதிக்குரிய சுஜூதை செய்து கொண்டால் போதுமானது அவருடைய தொழுகை நிறைவேறிவிடும் வல்லாஹுத்தஆலா ஆலம் [20].