Dr. ஷேக் முபாரக் மதனி

தொழுகையில் அத்தஹியாத்தில் விரல் அசைப்பது போன்று துவா ஓதும் போதும் விரல் அசைக்க வேண்டுமா?

தொழுகை அத்தஹிய்யாத் விரல் அசைத்தல் துஆ

← முந்தையஅடுதது →
கேள்வி
தொழுகையில் அத்தஹியாத்தில் விரல் அசைப்பது போன்று துவா ஓதும் போதும் விரல் அசைக்க வேண்டுமா?
பதில்
பதில்:

அல்ஹம்துலில்லாஹ் ஸலாம் ரசூலில்லாம் [13]. தொழுகையிலே அத்தஹிய்யாத்தில் விரல் அசைப்பது என்பதை பொறுத்தவரையில் அது இஜிதிஹாத்துக்குரிய கருத்து வேறுபாடான ஒரு விஷயம் என்பதை ஏற்கனவே பல தடவைகள் நாம் குறிப்பிட்டிருக்கிறோம் [13]. விரும்பியவர் விரலை நீட்டி வைத்துக் கொள்ளலாம் விரும்பியவர் அசைத்து கொள்ளலாம் [13]. அதற்கு இடம்பாடான ஆதாரங்களை நாம் பார்க்க முடிகிறது [13]. இப்ப கேள்வி என்னவென்றால் அத்தஹிய்யாத்தில் விரல் அசைப்பது போல, துவாக்கள் ஓதும்போதும் விரல் அசைக்க வேண்டுமா, என்று கேட்டால், அவ்வாறு விரல் அசைப்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரங்களும் கிடையாது [13]. இந்த அத்தேஹியாத்திலே இருக்கிற போது மாத்திரம் விரலை அசைத்து கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறது [13]. துவா கேட்கும் போது, அல்லது சில சகோதரர்கள் இக்காமத் சொல்லுகிற நேரத்தில், அஷஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ் என்று முஆதீன் சொல்லும்போது தங்களுடைய விரலை இவ்வாறு உயர்த்தி வைத்துக் கொள்வார்கள் [13]. அவ்வாறு செய்வதற்கு, எந்த ஆதாரங்களும் தெளிவாக ஹதீஸ்களிலே கிடையாது [13]. இருந்தாலும் ஹஜ்ஜத்துல் விதாவிலே ரசூல்ல ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சஹாபாக்கள் மத்தியிலே பேசி கொண்டிருக்கும் போது நான் உங்களுக்கு எத்தி வைத்து விட்டேனா என்று கேட்டு யா அல்லாஹ் இதற்கு நீயே சாட்சி என்று வானத்தை நோக்கியும் மக்களை நோக்கியும் தன்னுடைய விரலை காண்பித்தார்கள் என்று ஒரு செய்தி வருகிறது [13]. இதை நாம் பொதுவாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லும்போது உயர்த்துவதற்குரிய தெளிவான ஆதாரமாக இதை கொள்ள முடியாது [13]. எனவே துவா கேட்கும்போது விரல் அசைப்பது என்பது மார்க்கத்தில் உள்ளது அல்ல [13]. அல்லாஹுத்தஆலா ஆலம் [13].

← முந்தையஅடுதது →