அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ தொழுகையில் இல்லாமல் துஆவுக்காக மாத்திரம் சுஜூது செய்து அந்த சுஜூதிலே துவா கேட்பதற்கு மார்க்கத்திலே அனுமதி இருக்கிறதா? என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [10]. அன்புள்ள சகோதர சகோதரிகளே இஸ்லாத்தில் துஆவுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் இருக்கிறது [10]. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் அதுவாஹுவல் இபாதா துஆ அதுதான் இபாதத் வணக்கம் என்று சொன்னார்கள் [10]. ஒரு மனிதன் தன்னுடைய அடிமைத்தனத்தை சரியாக புரிந்து கொள்ளக்கூடிய நூறு வீதம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை துஆ துஆ உடைய நிலையாகும் [10]. எனவேதான் துவா கேட்பதை அல்குர்ஆனும் ஹதீஸும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன [10]. துஆக்கள் கபூலாக கூடிய நேரங்கள் சந்தர்ப்பங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன [10]. அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட ஒரு சந்தர்ப்பம்தான் சுஜூதிலே இருக்கிற போது துவா கேட்பதாகும் [10].
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் இன்ன அக்ர ஒரு அடியான் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருக்கிற நிலை சுஜூதுடைய நிலையாகும் அந்த நிலையிலே நீங்கள் அல்லாஹ்விடத்தில் அதிகமாக துவா கேளுங்கள்ல அவ்வாறு சுஜூதிலே கேட்கப்படுகிற துவா ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு மிகவும் தகுதியானது என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் [11]. இந்த அடிப்படையில் சுஜூதிலே துவா கேட்பது என்பது கபூல் செய்யப்படுவதற்கு மிக நெருக்கமான ஒரு சந்தர்ப்பமாகும் [11]. ஆனால் இந்த ஹதீஸிலே வரக்கூடிய சுஜூத் என்பது தொழுகையிலே உள்ள சுஜூதைதான் குறிக்கும் என்பதை உலமாக்கள் குறிப்பிடுகிறார்கள் [11]. இது அல்லாமல் துஆவுக்காக என்று மாத்திரம் தனியாக சுஜூது செய்வது என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நடைமுறையில் இருக்காத ஒரு விஷயமாகும் [11]. அதேபோல சஹாபாக்கள் யாருமே அவ்வாறு செய்ததாக துவாவுக்காக சுஜூது செய்ததாக எந்த ஆதாரங்களும் கிடையாது [11].
எனவே கண்ணியத்திற்குரிய உலமாக்கள் இவ்வாறான முறையில் ஒருவர் துவா செய்வதற்காக வெறுமனே சுஜூது மாத்திரம் தொழுகை அல்லாமல் வெறுமனே சுஜூதை மாத்திரம் செய்து துவா செய்வது என்பது பிழையான ஒரு நடைமுறை என்பதை வலியுறுத்துகிறார்கள் [12]. எனவே அன்புள்ள சகோதர சகோதரிகளே தொழுகையில் இருக்கும்போது சுஜூதில் அதிகமாக துவா கேட்பது சுன்னாவாகும் [12]. அதே நேரத்தில் தொழுகை இல்லாத சந்தர்ப்பத்தில் துவாவுக்காக இன்று மாத்திரம் சுஜூது செய்வது மார்க்கம் அனுமதிக்காத ஒரு விஷயமாகும் வல்லாஹுத்தஆலா ஆலம்வானஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ [12].