அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபத தொழுகை இல்லாமல் துவா செய்வதற்காக வேண்டி சுஜூது செய்து அந்த சுஜூதிலே துவா கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [3]. அன்புள்ள சகோதர சகோதரிகளே பொதுவாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் இன்ன அக்ரயூனரிஜித் ஒரு அடியான் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருக்கிற நிலை சுஜூதுடைய நிலையாகும் அதிலே அதிகமாக நீங்கள் துவா கேளுங்கள்ல அந்த நிலையில் கேட்கப்படக்கூடிய துவா விரைவாக ஏற்று கொள்ளப்படக்கூடியது என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் [3]. இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்துதான் சுஜூதிலே நாம் அதிகமாக துவா கேட்க வேண்டும் என்பதற்காக வேண்டி சிலர் தொழாமல் வெறுமனே சுஜூது மாத்திரம் செய்து துவா கேட்கக்கூடிய ஒரு நடைமுறையை நாம் காண முடிகிறது [3]. உண்மையிலேயே இந்த நடைமுறை சரியானதா என்று கேட்டால் குறிப்பிட்ட ஹதீஸ் நாம் ஏற்கனவே சொல்லிக் காட்டிய அந்த ஹதீஸ் தொழுகையில் இருக்கும்போது சுஜூதில் துவா கேட்பதைதான் குறிக்கிறது [3].
அது அல்லாமல் தனியாக சுஜூது செய்து துவா கேட்பதை அந்த ஹதீஸ் குறிக்கவில்லை என்பதை நாம் முதலிலே புரிந்து கொள்ள வேண்டும் [4]. தொழுகையிலே இருக்கிற போது சுஜூதிலே அதிலும் குறிப்பாக சுன்னத்தான தொழுகைகளில் நீண்ட நேரம் சுஜூதில்ரு இருந்து துவா கேட்பது சுன்னத் என்பதை இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து உலமாக்கள் நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்கள் [4]. எனவே தொழுது கொண்டிருக்கும் போது அது பர்தான தொழுகையாக இருந்தாலும் சரி சுன்னத்தான தொழுகையாக இருந்தாலும் சரி சுஜூதிலே நாம் அதிகமாக துவா கேட்பது இந்த ஹதீஸின் அடிப்படையில் மார்க்கத்தில் உள்ளது அதே நேரத்தில் வலியுறுத்தப்பட்டதும் கூட ஆனால் தொழுகைக்கு வெளியில் இருக்கிற ஒருவர் திடீரென சுஜூது செய்து சுஜூதிலே இருந்து கொண்டு துவா கேட்கிற நடைமுறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருக்கவில்லை [4]. அவர்களுடைய காலத்தில் சஹாபாக்களிடமும் அவ்வாறான ஒரு நடைமுறை காணப்படவில்லை [4]. அதற்குப் பிறகும் இந்த நடைமுறையை, சிறந்த நூற்றாண்டைச் சேர்ந்த, தாபியீன்கள், தப தாபியீன்கள் செய்தார்களா என்று கேட்டால், அவர்களிடத்திலும், இந்த நடைமுறை இருக்கவில்லை என்பதை நாம் காண முடிகிறது [4].
பிற்பட்ட காலத்தில் நல்லெண்ணத்தோடு ஆசையோடு நம்முடைய துவா கபூலாக வேண்டும் என்கிற எண்ணத்தோடு சில பொதுமக்களால் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் இந்த நடைமுறை என்பதை நாம் காண முடிகிறது [5]. எனவேதான் உலமாக்கள் இவ்வாறான ஒரு நடைமுறையை கண்டித்திருக்கிறார்கள் [5]. துஆ வுக்காக வேண்டி மாத்திரம் சுஜூது செய்யக்கூடிய நடைமுறையை உலமாக்கள் கண்டித்திருப்பதை நாம் காண முடிகிறது [5]. எனவே இதை சில அறிஞர்கள் பிதஅத் என்கிற வழிகெட்ட லிஸ்டிலே கொண்டு வந்து சேர்க்கிறார்கள் [5]. தொழு துஆவுக்காக மாத்திரம் சுஜூது செய்வது பிதத்தானது என்று சொல்கிறார்கள் [5]. ஏனென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுஜூதுகளை நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள் [5]. இந்த சுஜூதுகளிலே தொழுகையிலே நாம் செய்யக்கூடிய சுஜூது இருக்கிறது [5]. அந்த தொழுகையோடு தொடர்பாக ஒரு மறது ஏற்பட்டுவிட்டால் அதற்காக செய்கிற சுஜூ சுஜூது சஹு என்று இருக்கிறது [5]. அதே நேரத்தில் ஒரு நல்ல காரியம் நமக்கு நடக்கிற போது நாம் ஒரு விஷயத்தில் வெற்றி அடைகிற போது அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக சுஜூது செய்தல் என்ற சுஜூது சுக்குர் இருக்கிறது [5].
ஆனால் இவ்வாறு சுஜூது துஆ என்ற ஒன்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்கள் காட்டி தரவில்லை [6]. எனவே இது பிதஅத் என்பதை சில அறிஞர்கள் குறிப்பிடுவதை இங்கே நாம் காண முடிகிறது [6]. எனவே அன்புள்ள சகோதர சகோதரிகளே நம்முடைய துஆக்களை அல்லாஹுத்தஆலா கபூல் செய்ய வேண்டும் என்றால் அதற்கு நிறைய நிலைகளை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் [6]. அதிலே சுஜூத் தொழுகையிலே சுஜூதிலே கேட்பது ஒரு நிலை அதேபோல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வக்திலும் பாங்குக்கும் இக்காமத்திற்கும் இடையில் நாம் கேட்கக்கூடிய துஆ ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று சொன்னார்கள் [6]. அதேபோல நாம் பிரயாணத்தில் இருக்கும்போது துஆ கேட்டால் அந்த துஆ ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள் [6]. அவ்வாறு நாம் தஹஜ்ஜத் உடைய நேரத்திலே எழுந்து அல்லாஹ்விடத்தில் துஆ கேட்கிற போது அந்த துஆ ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் [6]. இவ்வாறு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துவாக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான பல நிலைகளையும் பல சந்தர்ப்பங்களையும் நமக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள் [6].
அந்த நிலைகளை அந்த சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்தி துவா கேட்டுக்கொள்ள வேண்டும் [7]. அதிலும் தொழுகைக்கு வழியிலே நம்ம துவா கேட்கும் போது, கைகளை, ஏந்தி துவா கேட்பதும், துஆ கபூல் ஆகுவதற்குரிய, ஒரு முக்கியமான, வழிகாட்டலாக காணப்படுகிறது [7]. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் [7]. நிச்சயமாக அல்லாஹுத்தஆலா தாராளமாக கொடுக்க கூடியவனாகவும் வெட்கப்படக்கூடியவனாகவும் இருக்கிறான் [7]. ஒரு அடியான் தன்னுடைய இரண்டு கரங்களையும் அல்லாஹ்வை நோக்கி உயர்த்திவிட்டால் அந்த கரங்களை வெறும் கரங்களாக வெறும் கைகளாக அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் [7]. எனவே நாம் இந்த வழிகாட்டல்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப நம்முடைய துவாக்களை அமைத்து கொள்ள வேண்டும் [7]. நம்முடைய சகல காரியங்களையும் அல்லாஹ்விடத்தில் கேட்பது வலியுறுத்தப்பட்டிருக்கிறது [7]. நாம் எவ்வளவுதான் அல்லாஹ்விடத்தில் அதிகமாக கேட்டாலும் அல்லாஹுத்தஆலா சலிக்காமல் நமக்கு தந்து கொண்டே இருப்பான் [7].
அல்லாஹ் குர்ஆனிலே சொல்கிறான் தாலதி அி என்னை பற்றி என்னுடைய அடியான் உன்னிடம் வந்து கேட்டால் நான் நெருக்கமாக இருக்கிறேன் என்று சொல்லு அவன் துவா கேட்டால் அவனுடைய துவாவை கபூல் செய்கிறேன் என்று சொல்லிவிடு என்று அல்லாஹ் குர்ஆனிலே நபி ஸல்லல்லாஹு அலைஹிஸல்லம் அவர்களை பார்த்து சொல்கிறான் அதேபோல ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் மல்லம்ஸ்லில்லாஹயலை யாரிடம் யார் அல்லாஹ்விடம் தன்னுடைய தேவைகளை கேட்காமல் இருக்கிறாரோ அவர் மீது அல்லாஹ் கோபப்படுகிறான் என்று சொன்னார்கள் எனவே அல்லாஹ்விடத்தில் நாம் அதிகமாக கேட்க வேண்டும் கேட்கிற போது அதற்குரிய ஒழுங்குகளை பேணி கேட்க வேண்டும் குறிப்பாக துவாக்கள் கபூல் ஆகுவதற்குரிய சந்தர்ப்பங்கள் இடங்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடையாளப்படுத்திய அந்த சந்தர்ப்பங்களையும் இடங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் [8]. மாறாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டி தராத வழிகளில் அல்லாஹ்விடத்திலே நாம் கேட்பதை தவிர்க்க வேண்டும் [8].
அந்த அடிப்படையில் துவாவுக்காக என்று தனியாக சுஜூது செய்து துவா கேட்பது என்பது மார்க்கத்தில் உள்ள ஒன்று இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது வல்லாஹுத்தஆலா ஆலம் வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ [9].