Dr. ஷேக் முபாரக் மதனி

தொழாத கணவனுக்கு என்ன சட்டம் அதற்காக மனைவி அவனிடமிருந்து குலா பெறலாமா?

தொழுகை கணவன் குலா திருமணம்

← முந்தையஅடுதது →
கேள்வி
தொழாத கணவனுக்கு என்ன சட்டம் அதற்காக மனைவி அவனிடமிருந்து குலா பெறலாமா?
பதில்
பதில்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸலாமு அலா ரசூலில்லாஹ் அம்மாபத தொழாத கணவனுக்கு என்ன சட்டம் அதற்காக மனைவி அவனிடமிருந்து குலா பெறலாமா என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [20]. ஏற்கனவே மனைவி தொழுவதில்லை என்றால் என்ன சட்டம் என்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு சொன்ன அதே பதில்தான் இதற்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [20]. கணவன் தொழாதவனாக இருக்கிறான் தொழுகையை மறுக்கிறான் தொழுகையை கேலி செய்கிறான் என்றால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவனாக கருதப்படுவான் [20]. அவனோடு வாழ்வது தொழ கூடிய முமினான பெண்ணுக்கு ஹராம்ஆகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [20]. தொழுகை ஏற்றுக்கொண்டு தொழ வேண்டும் என்ற ஆசை இருந்தும் பொடுபோக்காக தொழுகை விடக்கூடியவனை பொறுத்தவரையில் இவன் இஸ்லாத்தில்ிருந்து வெளியேறுகிறானா இல்லையா என்பதிலே அறிஞர்கள் மத்தியிலே கருத்து வேறுபாடு இருக்கிறது [20]. அதிகமான அறிஞர்கள் இவன் இஸ்லாத்தை விட்டு வெளியேற மாட்டான் இவன் ஒரு பெரும் பாவியாக கருதப்படுவான் [20]. இவன் தவ்பா செய்தால் அல்லாஹ் இவனுடைய தவ்பாவை ஏற்றுக்கொள்வான் [20].

இவனோடு வாழக்கூடிய பெண்ணை பொறுத்தவரையில் இவனுக்கு அவள் நசீஹ் செய்து கொண்டே இருக்க வேண்டும் [21]. அவன் திருந்துவான் என்கிற நம்பிக்கையோடு அல்லாஹ்விடத்தில் துவா செய்து கொண்டு அவனோடு வாழ்வதில் குற்றமில்லை [21]. இருந்தாலும் கூட நாம் தொடர்ச்சியாக நசியத் செய்கிறோம் [21]. அதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாகவே போய்க்கொண்டிருக்கிறார் [21]. தொழுவதில்லை ஜும்மாவுக்கும் செல்வதில்லை என்ற நிலை இருந்தால் அவரோடு வாழ்வதை விட பிரிந்து வாழ்வதே சிறந்ததாகும் [21]. இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஒரு பெண் குலா செய்வது அதாவது விவாகரத்தை அவள் பெற்றுக்கொள்வது என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் வல்லாஹுத்தஆலா ஆலம் [21].

← முந்தையஅடுதது →